Skip to main content

மௌன மோகம்...







உன் ஆசை காமம் என்றேன் 
இல்லை காதல் என்கிறாய் 

ஆசை அறுபது நாள் என்றேன் 
அதற்கும் மேல் என்கிறாய்...

மோகம் முப்பது நாள் என்றேன் 
அதுவும் பொய் என்கிறாய்..

தொலைவில் இருக்கும்வரை 
தொடத்தோன்றும் தான் உனக்கு... 

தொட்டுவிட்டால் 
தொடர தோன்றும் தானே...

தொடரும் போது 
சற்று இடரும்தானே...

 மறுபடியும் போய் நிற்கும் 
முன்னுரையில்தானே... 


 நீ தள்ளியே இரு 
உன் மனம் தள்ளாடும் வரை.... 




Comments

  1. காதல் போர்வை போர்த்திவரும்
    மௌனக் காமம் குறித்த கவிதை
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மௌனமான ஒரு மோகம்
      காதலின் முழுமைதானே....
      மிக்க நன்றி ரமணி அவர்களே...

      Delete
  2. நல்ல வரிகள்... அருமையாக முடித்துள்ளீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  3. நான் என் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. அப்பாடா இன்னிக்கும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம தப்பியாச்சு! :) :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா....
      நானும் டெம்ப்ளேட் கமெண்ட் போடாம விட்டுட்டேன்....

      Delete
  4. காதல் என்றாலும் காமத்துடன் கூடிய காதல் என்றாலும் மனதுக்கு பிடித்தவரிடம் மட்டுமே இருக்கமுடியும். தள்ளியே வைத்தாலும் காமத்தீ எர்ந்துகொண்டுதானே இருக்கும்.நீ தள்ளியே இரு என்றாலும் மனம் என்னவோ அருகில் வா என்றுதான் அழைக்கிறது. அருமையான வரிகள்தான் என்றாலும் முடிவை மாத்தியிருந்தால் இன்னும் அருமைதான்.

    ReplyDelete
    Replies
    1. விச்சு....முடிவு மாறியிருந்தால் பெண்ணை சுலபமாக புரிந்து கொண்டுவிடுவீர்கள்...
      நாங்கள் புதிராக இருக்கும் வரைதான் பெண்கள்....

      Delete
  5. அருமையாக ஆரம்பித்து அதை விட அருமையாக முடித்துள்ளீர்கள் இந்த இனிய கவிதையையை.வாழ்த்துக்கள் அகிலா.நம்ம வலைப்பூ பக்கமும் வந்து பாருங்களேன்.,.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா...கண்டிப்பாக படிக்கிறேன்....

      Delete
  6. காதலோ, காமமோ... தள்ளாடும் மனதின் முன் தடுமாறாத, தடம் மாறாத மனத்தின் நிலைப்பாடு அற்புதம். பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  7. பெண்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையோ எனவும் எண்ணத் தூண்டும் கவிதை!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் ரமேஷ்...நன்றி...

      Delete
  8. Replies
    1. நன்றி செய்தாலி...

      Delete
  9. அழகிய மௌனம்...

    ReplyDelete
  10. அருமையான வரிகள் காமமாம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் மட வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி

    ReplyDelete
  11. அருமையான வரிகள் காமம் மட்டும் இருந்தால் அங்கு காதல் செத்துவிடும் வேறு ஒரு இடத்தில உயிர்பிக்கும், ஆனால் காதலின் ஆன்மா இறந்து விட்டாலும் வேறு ஒரு இடத்தில உடனே உயிர்பிக்காது அது எங்கு முடிந்ததோ அதே இடத்தில வேதனைகளோடு சுற்றி சுற்றி நிற்கும் மீண்டும் ஒரு பிறவிகாலம் உண்மையாக வரும் வரை ..அனுபவித்தவர்களுக்கே அது நிதர்சனமான உண்மை ...உங்களை போன்ற கவிஞர்கள் அந்த நினைவுகளை கீறி வெளிய கொண்டு வந்து விடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி முடிந்து விடுகிறது ..நிஜத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் அந்த வரிகளுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது ..நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி