Skip to main content

Posts

Showing posts from May 13, 2012

பாரதி உன் மேல்......

எனக்கு கோபம்.... . பாரதி உன் மேல் எனக்கு கோபம் நீ தானே பெண்ணை படிக்க சொன்னாய் நீ தானே குடும்பத்தை உயர்த்த சொன்னாய் நீ தானே சமுதாயத்தை முன்னேற்ற சொன்னாய் படிக்கும் போது அவள் பெண் பிள்ளை குடும்பத்தை உயர்த்தும் போது அவள் பெண் தெய்வம் சமுதாயத்தை உயர்த்த போனாலே அவள் பெண்ணல்ல பேதையான மாதவி...... குற்றம் சாட்டப்படுவது பெண்தான் சாட்டுவதும் பெண்தான்.... கைப்பையுடன் வேலைக்கு போய் கவலையுடன் திரும்பும் பெண்ணை கைக்காட்டி சிரிக்கும் கூட்டம் ஆண் மட்டுமில்லை பாரதி...பெண்ணும்தான்.... ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே இந்த சமூக கூட்டம் தோழனாய் தோழியாய் சகோதரனாய் சகோதரியாய் சாதாரணமாய் பார்க்காத சிந்திக்காத புறம் பேசும் பெண்களின் புண்படுத்தும் பேச்சுகள்... இழிவான இந்த பெண்களின் இகழ்ச்சிக்கு பயந்து மாய்ந்து போன பெண்களை தெரியுமா பாரதி உனக்கு? உன் கனல் கக்கும் சாட்டையடியால்  ஆண்களிடம் இருந்து எங்களை சற்று நிமிர செய்தாய் இன்று நீ இருந்தால் இப்படி பேசும் பெண்களை என் செய்வாய் சொல்.... வேண்டாம் பாரதி, நீ மறுபடியும் வேண்டாம்..... நீ மறுபடியும் பிறந்து வந்தால் உன் கவிதைகள

பெண்கள் பலவிதம்.....

பெண்களில் தான் எத்தனை விதம்... சில பெண்கள் குடும்பத்திற்காக மட்டும் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்திருப்பார்கள். ஆனா உருவம் மட்டும் குண்டு பூசணிக்காயாக மாறியிருக்கும். சிலர் தன்னை மட்டுமே அழகு படுத்திக் கொண்டு, ஒரு வேலையும் செய்யாமல், சமையல் செய்ய சமையல்கார அம்மா , வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் கழுவ என்ற ஒவ்வொன்றுக்கும் வேலைக்காரி, பிள்ளைகளை கார் டிரைவர் வைத்து வளர்ப்பார்கள். சில பெண்கள் மட்டும் தான் தன்னையும் பார்த்து கொண்டு வீட்டுக்காகவும் உழைப்பார்கள். நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன் சேரன் எக்ஸ்பிரஸில். ஏறும்போதே என் இருக்கைக்கு அருகில் யார் இருக்கிறார்கள் என்று chart ல் பார்த்துவிட்டுதான் ஏறுவது என் வழக்கம். பார்த்ததில் ஒரு வயதான தம்பதியரும் (வயது 72, 67) அடக்கம். அவர்களின் மூன்று வயதுடைய பேத்தியும் உடன் இருந்தாள். அவர்களின் இருக்கையின் எதிரில் ஒரு பெண்ணும் அவளுடைய இரு குழந்தைகளும் இருந்தனர். அந்த இரண்டாவது பையன் இந்த குழந்தையுடன் விளையாட முயற்சி பண்ணும போதெல்லாம் இந்த வயதான பெண்மணி 'make them sleep ' ன்னு சொ