Skip to main content

Posts

Showing posts from September 23, 2012

பாடும் பறவைகள்....

பறக்கவும் பாடவும்.... சின்ன கம்பிகளும்   சித்திர வளைவுகளும்   சிங்கார இருக்கையும்   சிவப்பாய் கோவைபழமும் இருந்தாலும் சுதந்திரமாய் பறக்க   சிறகுகளும் இல்லாமல்   சங்கீதமாய் பாட   சந்தோஷமும் இல்லாமல்   தினம் தினம்   கூண்டுக்குள்   பாடும் பறவைகள்.....

ஏவாள்....

பூப்போட்ட பாவாடையில் பூப்பெய்தி தாவணியில் சுதந்திரமாய் நான்... உன் மணவறையில் உன் மேலுள்ள கிறக்கத்தில் சங்கீதமாய் நான்... சம்சாரத்தின் பிடியில்   சலிப்பாய் வாழ்ந்து சங்கீதம் செத்து இப்போது கூண்டுக்குள் மொழியில்லாமல் வார்த்தையில்லாமல் குரல் தொலைத்து ஏவாளாய் நான்...

பெயர் தெரியாமல்...

உறவுகள்... எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடமாக ரொம்ப பழக்கமான ஒரு குடும்பம். தன் பேரனுக்காக ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க அந்த பாட்டி. அப்படியே எங்க கூட பழக்கமாகிட்டாங்க. அவங்க வீட்டுல என்ன நடந்தாலும் நாங்க இல்லாம இல்ல. அதே மாதிரிதான் இங்கேயும்.  அம்மா என்கிற வார்த்தையை தவிர நானும் என் கணவரும் வேறு வார்த்தை சொல்லி அவங்களை கூப்பிட்டதில்லை. எத்தனையோ குடும்ப விசேஷங்களுக்கு பத்திரிகைகள் பரிமாறிக் கொண்டதுண்டு. ஆனால் அவங்க பெயரை தெரிந்து கொள்ளவும் இல்லை. அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. நேற்று அவங்க பேரனின் திருமண பத்திரிகை வைத்தார்கள்.  அப்போதுதான் பார்த்தேன் அவனின் இரண்டு பாட்டிகளின் பெயரும் இருந்தது. இதில் எது இவர்களின் பெயர் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். பாப்பநாயக்கன்பாளையம் என்ற ஊரின் பெயரை வைத்து அம்மாவின் பெயர் காந்தாமணி என்றும், ஐயனின் பெயர் சுப்பையன் என்றும் கண்டுபிடித்தேன். அவங்க பெயரை எதற்கு எழுதுகிறேன் என்றால், இப்படி எழுதினாலாவது நம்ம மூளைக்குள்ளே ஏறும்னுதான்.  அவனின் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அவர்களின் குழந்தைகள் என்று அணை

சுந்தரபாண்டியன்....

கலக்கல் பாண்டியன்.... படத்தின் பயோடேட்டா : இயக்குனர் : பிரபாகரன் இசை : ரகுநந்தன் ஒளிப்பதிவு : பிரேம்குமார் தயாரிப்பு : சசிகுமார் நடிகர்கள் : சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, விஜய் சேதுபதி, பிரபாகரன் நம்ம சுந்தரபாண்டியன்..... படம் பார்க்க போனா சந்தோஷமா பார்த்துட்டு வரணும்ங்கிற இலட்சியதோட வாழுறவ நானு.  அழுமூஞ்சி படங்களை பார்க்க போகவே மாட்டேன். இந்த படத்தில சிரிக்க வைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதனால பார்க்க போனேன்....  எடுத்த உடனே உசிலம்பட்டிக்கு ஒரு பெரிய பில்ட் அப் கொடுத்து நம்ம உசுப்பேத்தி உட்காரவச்சாலும் படம் பாதி வரைக்கும் காமெடிதான். அப்புறம் வெட்டு குத்துன்னு போய் நம்மளை பயம் காட்டி கடைசில பாக்கியராஜூக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்ல, அது மாதிரி நம்ம சசிகுமாருக்குன்னு உள்ள ஸ்டைல்ல படத்தை முடிச்சிட்டாங்க... ஹீரோ அறிமுகம் 'தமிழ் படம்' ன்னு சிவா நடிச்சு  வெளி வந்துதே (scoof film) அதை ஞாபகப்படுத்தியது.   கொஞ்சம் செயற்கையா இருந்தது. ஆனா பாட்டு நல்லா இருந்தது. பாட்டிகளும் நல்லா  இருந்தாங்க... படம் முழுவதும் பார்க்க பார்க்க சசிகுமார்....சசிகுமார்....சசிகுமார்.....துறுதுறுப்பா சிரித்த மு