Skip to main content

Posts

Showing posts from July 17, 2011

காந்தியவாதிகளும் உண்ணாவிரதமும்

லஞ்சம்                    சில மாதங்களாகவே லஞ்சம் ( corruption ) என்னும் பூதத்தை எதிர்த்து நம் நாட்டில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் உண்ணாவிரதம் இருப்பதும், போலீஸ் அவர்களை கைது செய்வதும், மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும், அரசியல்வாதிகள் lokpal bill யை (அதன் முழு சாராம்சமும்  நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை; உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கே புரியுமா  என்பது   கேள்விக்குறி) நிறைவேற்ற போவதாக கூறிக்கொண்டே அதில் சுகமாக குளிர் காய்வதும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.                      இந்த லஞ்சம் என்பது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டும் tension யை கொடுப்பதில்லை. கொடுக்க தெரியாதவர்களுக்கும் வாங்க தெரியாதவர்களுக்கும் கூட பிரச்னைதான். லஞ்சத்தால் நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. நம் நாட்டு பொருளாதாரம் சீர்குலைகிறது.  Living Gandhi என்ற  புதியதொரு பட்டத்தை பெற்றிருக்கும் அன்னா ஹசாரே சொல்வதும் சரிதான். இதற்கென்று பல சமூக வலைப்பின்னல் தளங்களில் Like button எல்லாம் வைத்து அதற்கு ஏக மரியாதை. வன்முறை                               இதில் என் கருத்தை நான் இங்கே ப

Hit Song from 'Puthiya Mannargal'

By chance I hear this song in FM radio. I stunned by the music and the voice. Got an urge to see the scene and search and find out . It is from the movie 'Puthiya Mannargal' starring Vikram, Mohini... But in this song there is no Vikram but Mohini present.Music scored by A R Rehman. The pair hits the screen in a pompous way. It rocks. Watch it.... http://www.youtube.com/watch?v=QQSs55KrrbU

திரைச்சீலை - ஒரு கண்ணோட்டம்

திரைச்சீலை நூலும் தறியும் ஓவியர் ஜீவா   ஓவியர் ஜீவா எழுதிய ‘ திரைச்சீலை ’ என்ற இந்த நூல் இந்திய தேசிய விருது 2011இல் திரைப்படத்தைப் பற்றி சிறப்பாக எழுதபட்டமைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. திரைபடத்தின் உலக வரலாறு, இந்திய வரலாறு பற்றி பல கோணங்களில் அலசப்பட்டு உள்ளது. திரைப்பட துறையின் வளர்ச்சி எவ்வாறு இயக்குனர்கள், கதாசிரியர்கள் மற்றும் நடிகர்கள் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு உள்ளது என்றும் , ரசிகர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த புத்தகத்தில் பல அத்தியாயங்களில் தனிப்பட்டு ஒரு திரைப்படத்தையும் , சில அத்தியாயங்களில் பல திரைப்படங்களை ஒரு சேரவும் அலசி இருக்கிறார். மொத்தமாக சுமார் அறுபது அத்தியாயங்களை எழுதியதாக தகவல். அவற்றுள் முப்பத்தி ஒன்பது மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. மற்ற அத்தியாயங்களையும் படிக்கும் ஆர்வம் இதை படித்தபிறகு நமக்கு ஏற்படுகிறது. பொழுதுபோக்கு அம்சமான சினிமாவை எப்படி பார்க்க வேண்டும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை   எப்படி தரம் பிரித்து பார்ப்பது, அதை எப்படி உள் வாங்கிக் கொள்வத