Skip to main content

Posts

Showing posts from April 14, 2013

காலிழந்த காகமொன்று...

தத்தி தத்தி  என் வீட்டு கம்பியின் மீது நீ என் அருகாமையை கண்டுக்கொள்ளாமல்... ஒன்றும் பேசிக்கொள்ளாமலே  வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம்     இருவருமாய் அந்த பெருஞ்சாலையை... வாழ்வின் போராட்டத்தை நினைக்கும்  மனவோட்டம் இருவரின் நினைவிலும்  ஊனமான காலுடன் நீயும்  ஊமையான பெண்ணினமாய் நானும்  மௌனங்களை மட்டுமே சுமந்து வெகு நேரமாய் பார்த்து கொண்டிருக்கிறோம்  அந்த பெருஞ்சாலையை....