Skip to main content

Posts

Showing posts from May 5, 2013

ஹலோ...ராங் நம்பர்....

கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர் காமிக்கிற டிஸ்ப்ளே வேற வேலை செய்யலை. எனக்கு பொறுமை கொஞ்சம் அதிகம். அதனாலே பொறுப்பா அமைதியா பதில் சொல்லிகிட்டு இருந்தேன்.   அதுல ஒரு பெண்மணி அடிக்கடி கூப்பிட்டுகிட்டு இருந்தார். முதல்ல நாலைந்து தடவை ராமச்சந்திர அண்ணா இருக்காங்களா என்று தெலுங்கு வாடையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் சும்மா கேட்கமாட்டார். ரொம்ப பப்பிலி குரலில் பேசுவார். ரொம்ப எரிச்சல் வந்தாலும் அந்த குரலில் உள்ள சந்தோஷம் நம் BP யை கொஞ்சம் குறைத்துவிடும்.   அப்படி ஒரு அண்ணா இல்லை என்று சொல்லி சலித்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு சத்தமில்லை. நானும் கூட சரியான நம்பரை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அந்த பெண்மணியின் குரல். இந்த முறை அண்ணாவை தேடவில்லை. அதற்கு பதிலாக மீனா தானே என்று ஆரம்பித்து தெலுங்கில் ஏதோ சொன்னார்.   எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் ' போன் பண்ணினா வேற நம்பர் போகுது '   என்று அவர் சொல்வது

வண்ணமிடாத கல் கோபுரம்...

கண்களை கடந்த அனைத்திலும் வண்ணங்கள் கலந்திருக்க அந்த கோபுரம் மட்டும் வண்ணமிடப்படாமல் நான்தான் கல்லான கோபுரம் என்றது... அதன் நிமிர்ந்த பார்வை கலப்படம் இல்லாத கம்பீரத்தை காட்டியது... வண்ணங்களை பூசிக் கொண்ட மனிதர்களை இகழ்வாய் பார்த்தது... சிற்பியின் உளி உடைத்த இடங்களை புடம் போட்டு காட்டியது... முகமூடிகள் கொண்டு முகங்களை மறைக்காமல் தவறை தவறென்று ஒப்பும் மனதை கொடுத்தது... வண்ணமிடாத கல் கோபுரம்தான் வாழ்வின் வண்ணத்தை காட்டிவிட்டு என்னை கடந்துச் சென்றது...

பாதை தவறிய...

ரயில் பூச்சி... என் சிறு வயதில் பாட்டி வீட்டின் சிவப்பு ஓடு போட்ட முற்றத்தில்...   கொல்லைப்புறத்தில் கோபுரம் கட்டியிருக்கும் வைக்கப்போரின் ஈரமான ஓரங்களில்... நெளிந்து நெளிந்து விரைவாய் நீ எங்கோ அவசரமாய் ஓடுவதை பார்த்திருக்கிறேன்... உன்னை போல் நிறைய கால்கள் இருந்தால் ஓட்டப்பந்தயத்தில் ஓடியிருக்கலாமோ   என்றும் யோசித்திருக்கிறேன்... உன்னை ஒரு இடத்தில் நிறுத்த ஈக்கில் குச்சி ஒன்றை குறுக்கே வைக்க   போய்க்கொண்டிருக்கும் திசை மாற்றி வேறு திசையில் ஓடுவதை ரசித்திருக்கிறேன்... அதையே விளையாட்டாய் நாம் இருவரும் எத்தனையோ முறை சலிக்காமல் விளையாடியிருப்போம் என் சித்தி வந்து என்னை இழுத்துச் செல்லும்வரை... நேற்று உன்னை என் வீட்டின் சிமெண்ட் கட்டத்தில் பார்த்தபோது பழைய விளையாட்டு ஞாபகம் வர கம்பி ஒன்றை குறுக்கே வைக்க இப்போதும் அதே போல்தான் திசை மாறி ஓடுகிறாய்... இலக்கு என்று உனக்கு ஏதுமில்லையோ இல்லை திசையறிவதில் குழப்பங்கள் அதிகமோ இலக்கின்றி எப்படி உன் வீடு சேர்வாய்... கவலைதான் எனக்கு... இந்தமுறை உன்னை தடுக்கவில்லை நான் வந்த பாதை பிடித்தே உன் வீடு போய் சேர்ந்துக்கொள

மலைமுகடு...

வானத்தின் பின் ஒளிந்த இந்த மலைமுகடு மெல்லிய வரைபடமாகவே கண்ணுக்கு.... ஆங்காங்கே பசுமை கண்ணில் பட கருமையா நீலமா என்று அனுமானிக்க முடியாத வண்ணத்தில் இருந்தது... அதன் உயரத்தை மீறி பறக்கும் பறவை அதை உற்று நோக்கிவிட்டு தான் செல்கிறது மலையின் வியாபம் அதை ஈர்க்கிறது போலும் முகட்டை நோக்கி பயணிக்க அதற்கும் தயக்கம்தான்... மேக மூட்டைகளுக்கு மட்டும் அந்த பயமில்லை  அதன் மீதேறி அமர்ந்துக் கொண்டது அந்த மலைமுகடும் வண்ணத்தை மாற்றி மகிழ்ச்சியை மட்டும் பூசிக்கொண்டது....