Skip to main content

Posts

Showing posts from October 6, 2013

ஏதுமில்லை என்னிடம்...

மௌனத்தை வற்புறுத்தி  வார்த்தைகளை வாங்க முடியாமல்  சிந்திக் கிடப்பவைகளை மட்டும்  சிரச்சேதம் செய்துக் கொள்கிறேன்...  என்றாவது ஒருநாள் அவையும் என்னை விட்டு நீங்கக் கூடும்...  அதற்கு முன் சிலவற்றையாவது  யமுனையில் கரைக்க விழைகிறேன்...  இனி உன் நினைவுகளைத் தொடுக்க  ஏதுமில்லை என்னிடம்  புத்தகத்தின் உள் ஒளிந்திருக்கும்  பழுப்பாய்ப் போன மல்லிகையின்  ஒன்றிரண்டு சிற்றிதழ்களைத் தவிர...