Skip to main content

Posts

Showing posts from July 1, 2012

பெண்களாகிய...

நாங்கள்…. நம் நாட்டில் வாழும் பெண்களில் பலர் மனதில் இருக்கும் பல விஷயங்களை யாரிடமும்  பகிர்ந்து கொள்வதில்லை. ஆண் வர்க்கம் செய்யும் வக்கிரமான சில செயல்களை வெளியே பெண்களால் சொல்லமுடிவதில்லை. படிக்கும் போது கூட பெண்கள் தங்களுக்கு நடக்கும் சில அநியாயங்களை  வெளிபடையாக தோழிகளிடமும் சகோதரிகளிடமும்   பேச முடிகிறது. திருமணம் ஆகிவிட்டால் மனம் விட்டு பேசுவது நின்று போய்விடுகிறது. யாரையும் (கணவரையும் சேர்த்துதான் ) நம்பி சொல்லமுடியாது.  பெண்களின் மனது ஓர் ஆழ்கிணறு.  என்ன  துன்பத்தை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆண்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அந்த வர்க்கத்தில் பல பேருக்கு மென்மையான, மனதை பாதிக்ககூடிய சின்ன சின்ன சமாச்சராங்களை  புரிந்து கொள்ள முடியாது. வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாலே போதும், தெருவில் நடப்பவர்கள் உரசுவதும், பேருந்தில் அல்லது ரயிலில் அவர்கள் கைகள் பெண்களில் மேல் மேய்வதும், சுரங்க பாதையில் ஒரு கண நேரத்தில் என்ன நடக்கும் என்று வெளியே சொல்லவே முடியாத சில விஷமங்களும், பெண்கள் அனுபவித்து  கொண்டுதான்  இருக்கிறார்கள்.

பெண்கள் பலவிதம் 3....

அதிகாரமான பெண்கள்.... நேத்து 'பூவா தலையா' ன்னு ஒரு படம் 2011 ல வெளிவந்தது,  டிவி யில்   சும்மா சேனல் மாத்தும் போது   பார்த்தேன். பார்த்தேன்னு சொல்லக்கூடாது. அது எல்லாம் ஒரு படம்ன்னு உட்கார்ந்து பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை.  இதே பெயரில் உள்ள பழைய 'பூவா தலையா'  படத்தை எத்தனை தடவை டிவி யில் பார்த்திருப்போம். அந்த படத்தை நினைத்தாலே முதலில் மனதுக்கு வருவது அதிகாரம் பண்ணும் அந்த பர்வதம்மாள் (வரலக்ஷ்மி) கதாபாத்திரம் தானே. அவங்க எவ்வளவு அழகா அதிகாரம் பண்ணுவாங்க. அதிகாரம் பண்ணும் பெண்கள் ஒரு அழகுதான்..... சும்மா ரோட்டில் நடக்கும் போது சுத்தும் முத்தும் பார்த்தாலே தெரியும். மேல் மட்டமோ கீழ்மட்டமோ  எத்தனை பெண்கள்  அதிகாரமா அலைவாங்க தெரியுமா....மார்க்கெட்டு உள்ளே போய் பாருங்க, 'இவ எங்கடி போனா, நீ வந்து அவ கடைல இருக்கே....ஏய் மல்லிகா, இவளே....உன் கடைல இவ இருந்தா, அவ கடையை யாரு பார்ப்பா...சின்ன கிழவியா...' என்று அதிகாரம் பண்ணும் பொம்பளையை பார்க்கலாம்.  எங்க ஊருல எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மா சாவி கொத்து இடுப்பில் சொருகி பந்தாவா அலையும். எப்படியும் பீ