கவனமாக கொண்டாடவும்
காரணம் அந்த செய்தியின் தலைப்பிலேயே இருந்தது, விபத்து நடந்த இடம் 'Pub', அப்புறம் அது ஒரு நள்ளிரவு கடந்த 'Birthday Party' என்பதுமாக இருக்கலாம்.
Pub, Party என்பதெல்லாம் நம் கலாசாரத்திற்கு தேவைதானா என்ற கேள்வியும் அதன் தொடர்ச்சியாய் தோன்றும் அதில் பங்கேற்கும் மனிதர்கள் மேல் நமக்கு ஏற்படும் ஒட்டாத தன்மையும் ஆகும்.
கோவில்களில் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தில் ஏற்படும் நெருக்கடியால் மிதிபட்டு (Stampede ) ஏற்படும் உயிர் இழப்புகள், புது பட ரிலீஸ் அன்று டிக்கெட்டு எடுக்க உண்டாகும் நெரிசலில் நேரும் இழப்புகள் இப்படி எத்தனை.. 2015 யில் மெக்கா புனித தளத்தில் நெரிசலில் இறந்த 2000 உயிர்கள் இன்னும் உலகத்தின் நினைவில் நிற்கும்..
மனிதர்கள் அதிகமாய் கூடும் இடங்களில் ஏற்படும் இம்மாதிரியான உயிர் இழப்புகள் ஒரு பெரிய சங்கடம்தான். தேவையற்ற இடங்களில் நம் இருப்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியங்களை குறைக்கவேண்டும். அதிக ஜனத்தொகை உள்ள நம் இடங்களில் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்விக்குறிதான்.
இதையும் ஒரு சாதாரண தீ விபத்தாய் என்னால் கடந்திருக்க முடியும். மனதில்லை. இது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்.
இன்னும் ஒரு நாளில் பிறக்கவிருக்கும் புது வருட கொண்டாட்டங்கள், மது இல்லாமலே கடற்கரையில் குழந்தைகளுடன் இரவை கொண்டாடும் இப்புதிய தலைமுறை மக்கள் ( போன வருடம் பார்த்தோம் தொலைகாட்சியில்), அதிலும் மது அருந்திவிட்டு பெண்களுடன் நடத்தும் சில்மிஷங்கள் (அதையும் பார்த்தோம், அப்பெண்களும் கண்டுகொள்ளாததை) மனதுக்குள் ஒரு பயத்தைத் தருகின்றன, நாம் எங்கு போகிறோம் என்பதை நினைத்து.
இதில் உனக்கென்ன என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரியவர்கள் மிதமிஞ்சியவர்கள். அவர்கள் குறித்து சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனால் குழந்தைகளை இம்மாதிரியான நள்ளிரவு தாண்டிய கேளிக்கைகளுக்கு இழுத்துச் செல்லாதீர்கள். உயிர் இழப்பின் பயங்கரம் ஒரு புறம், வேண்டாத ஒரு கலாசாரத்தை முன்னிலைபடுத்துவதன் அபாயம் மறுபுறம்.
புது வருடத்தை அமைதியாக வரவேற்றாலும் கூட அது ஒன்றும் கோபித்து கொள்ளாது என்று நினைக்கிறேன்.
Celebrate Safe..
~ அகிலா..