Skip to main content

Posts

அறவி புதினம் குறித்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு - முனைவர் பெண்ணியம் பிரேமா

 அறவி: ஓர் பார்வை  காணொளி லிங்க்: அறவி : ஓர் பார்வை அறவி புதினம் குறித்த புத்தகத் திறனாய்வு - இணைய நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவினரால் நிகழ்ந்தது நேற்று (18.11.2023, 7.30 pm)  அறவி குறித்த கதைக்களத்தை விவரித்த முனைவர் பிரேமா அவர்கள், கதையின் பாடுபொருளை, கதை அமைப்பை, கதைக்களங்களான திருச்செந்தூர் மற்றும் இங்கிலாந்தில் நார்தம்ப்டன் சூழல் விவரிப்பின் நேர்த்தியையும் வெகுவாக பாராட்டினார்.  பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள், பெண்ணியத்தின் புதிய சிந்தனைகள் என்று நேற்றைய அறவி புத்தகத் திறனாய்வின் பக்கங்களை, அவற்றை நோக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் மேடையாக்கி, 'பெண்ணியம்' பிரேமா அவர்களால் அருமையாக மாற்றிக்கொடுக்க முடிந்தது வியப்பே.  இந்த புதினத்தின் தலைப்பால், அறவி என்பது இல்லறத்துள் பெண் துறவைக் குறிக்கும் சொல்லாக மாறியிருப்பதாக அவர்கள் உரைத்தபோது மகிழ்வாக இருந்தது.  பெண்ணின் உடலியல் பிரச்சனைகளைப் பேசும் ஒரு புதினத்தால், அவளின் வெளியழகை பேசாமல், அவளின் அகத்தை மட்டும் பேசியிருப்பது, பெண்ணை முன்னிலைப்படுத்திய புதினங்களில் என் பார்வையில் இதுவரை யாரும் இவ்வாறு எழுதியதில்லை என்று அவர் பேச
Recent posts

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் | மாற்று மெய்மை

  மாற்று மெய்மை எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலகம்    மதுரை வட்டார வழக்கில், புதுமையாய், யதார்த்தவியலில் ‘மாற்று மெய்மை’ என்னும் கோட்பாடுகளை முன்னிறுத்தி, தன் புதினங்களாலும் சிறுகதைகளாலும் தனித்துயர்ந்து நிற்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள். அவரின் படைப்புகள் குறித்தும் அதில் புழங்கும் கதை உத்திகள் குறித்துமான ஆய்வுகள் சமகால இலக்கிய உலகில் மிகவும் அவசியமான ஒன்றே      யுவன் சந்திரசேகரின் படைப்புலகம்  நாட்டார் வழக்கியலில் கதைசொல்லிகள் சொல்லும் கதைகள் தலைமுறைகள் கடந்தும் நம்முள் காலூன்றி நிற்கின்றன. ஓரிரு கதாபாத்திரங்களுடன் தொடங்கி, பல தலைமுறைகளை, கதைகளன்களை, பலவித தளங்களை, காலகட்டங்களைக் கடந்து புதிதாய் இணைப்பு கதைகளை வடிவமைத்து, முடிவுறாத கதைதன்மையுடன், நம் முன்னோர்கள் இட்டுக்கட்டிய கதைகள் சுவாரசியம் மிக்கவை.   அதன்பிறகான இலக்கிய உலகில், அவ்வழக்கியலில் இருந்து கதை இலக்கியம் சற்று மாறி, உருமாறி, மையக்கருவாய் ஒன்றை நிலைப்படுத்தி, முடிவு நோக்கி நகரும் தன்மையுடையதாயும், வணிக நோக்கின் சாயம் பூசிக்கொண்டும் பயணிக்கத் தொடங்கியது. சில அழகியலை மட்டும் பிரமாதப்படுத்தியும் வெளிவந்த

அறவி நாவல் : ஓர் அறிமுகம்

  அறவி நாவல்  (உரை: கவிஞர் நித்யா) அறவி புத்தகம் வாங்க, அறவி கவிஞர் நித்யாவின் அறவி புதினம் குறித்த உரைக்குள் 'பெண்ணின் சுயம்' குறித்த ஒரு நீண்டதொரு அலசல் நிகழ்கிறது. இத்தனை அதிகமான கதாபாத்திரங்கள், பெண்ணின் உடலரசியல், குடும்ப அமைப்பு, ஆண் தோழமை என்ற பலவித அடுக்குகளுக்குள் இருக்கும் என்னுடைய 'அறவி' புனைவுக்குள் அநாயாசமாக சுயத்தைத் தேடியிருக்கிறார் உரையாசிரியர். அகம் சார்ந்து இயங்கும் பெண்களை அடையாளப்படுத்துகிறார். புனிதம் குறித்த அர்த்தப்படுத்துதல் சிறப்பு. 'வசந்த காலத்திற்குத் தயாராகும் இலையுதிர்க்காலம் போல' என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிகழ வேண்டிய உணர்வு இதுதான் என்பதை புதினம் சுட்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நன்றிங்க நித்யா.  "விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே"  எனும் பாரதியின் குரலை,  அறவியின் ஒற்றை குரலாய், நான் பதித்திருப்பதையே, 'விடுதலையாகி நிற்பாய்' என  இவ்வுரைக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் நித்யா அவர்கள்.  அறவி புதினம் குறித்த ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொரு பார்வையை நான் உள்வாங்குகிற