Skip to main content

Posts

Showing posts from April 28, 2013

நாம் நடக்கும் பாதையில்...

தினமும் நாம் கடந்து செல்லும் பாதைகளில், பேருந்து நிறுத்தங்களில், ரயில் நிலையங்களில், கோவிலின் முகப்பில், குப்பை தொட்டிகளில் எல்லாம் வயதானவர்கள், நோயில் அவதிப்பட்டு சுருண்டு கிடப்பவர்கள்,அரை நிர்வாணமாய் அல்லது முழு நிர்வாணமாய் கிடக்கும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஆதரவற்றோரின் பல முகங்களை நாம் பார்க்கிறோம் பார்த்தவாறே ஒரு பரிதாபப் பார்வையுடன் தாண்டிச் செல்கிறோம். எத்தனை மாதங்களாய் அவர்கள் அங்கு அந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நாம் யோசித்து கூட பார்ப்பதில்லை.  கடந்து விடுகிறோம். கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் : கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு கோவை வலைப் பதிவர்களின் தோப்பு அமைப்பு சார்பாக நானும் சக வலைப் பதிவர்கள் கோவை சரளா  மற்றும்  இனியவை கூறல்  கலாகுமரன்   சென்றிருந்தோம்.  அந்த இல்லத்தில் சுமார் நூறு ஆதரவு இழந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். இனத்தாலும் மொழியாலும் அந்தஸ்தாலும் அறிவினாலும் வேறுபட்ட மனிதர்கள்.  அவர்களை பார்த்த போதுதான் தெரிந்தது நாம் கண்டும் காணாமல் கடந்து சென்றவர்கள் இவர்களை போன்றவர்

தாத்தாவும் அந்த நாயும்...

விடி காலையிலே நடக்கத் தொடங்கிவிட்டார்கள் மடித்துக் கட்டிய வேட்டியும் துண்டுமாக அவரும் வாலில் சலங்கையை கட்டிக் கொண்டு துள்ளலுடன் அதுவுமாக நடக்கத் தொடங்கிவிட்டார்கள்... அவரை சுற்றி ஓடிக்கொண்டு அவரின் கால் செருப்பை கவ்வுவதாக பாவனை செய்துக் கொண்டு பக்கவாட்டில் ஓடி அவரின் முகம் பார்த்து சிரித்து கொண்டு சிறிது தூரமாய் ஓடி போய் நின்று அவர் அருகில் வந்தவுடன் இன்னும் சிறிது தூரம் ஓடிப் போய் நின்று அந்த விளையாட்டை தொடர்ந்துக் கொண்டு... அவரின் கவனியாமை கண்டு அவரை முன்னால் போகவிட்டு நின்று கொண்டது சிலையாய் அப்படியும் அவர் அதை சட்டை செய்யாமல் செல்ல மறுபடியும் ஆரம்பித்தது தன் சேட்டையை முதலிலிருந்து... அவர் நடந்துக் கொண்டேயிருந்தார் நான் உன் எஜமான் என்கிற தோரணையில்....