Skip to main content

Posts

Showing posts from October 28, 2012

மழையின் தீண்டல்...

பாக்கு மரங்களிடையில் பாயும் கம்பிகளாய் மழை... சாய்க்க முடியாத சங்கடத்தில் சரம்சரமாய் மணலில்.... நிழற்குடையின் மேல் நிதர்சனமில்லாமல் மழை... நிற்கிற மனிதர்களை தீண்டமுடியாமல் குழிபறித்து மணலில்...... ஒத்தையடி சாலையில் உக்கிரமாய் மழை... குடையாய் சேலை தலைப்பு விரித்து கூடையை தலையில் கமத்தி விரசலாய் ஓடும் பெண்களை குறிவைத்து.... இந்த முறை வென்றது மழைதான்... முக்காடிட்டவர்களை முழுவதுமாய் நனைத்து மகிழ்ச்சியாய் மண்ணை தொட்டது....

குப்பைகள் குடும்பமாய்...

வண்ணங்களின் சாயலே இல்லாமல் எண்ணங்கள் வெறுமையாய் இருக்க... மனதின் ஓரத்தில் மட்டும் குவிந்து போன குப்பைகள்.... அன்பு , பாசம் , காதல் , கடமை கோபம் , வெறுமை என்று குடும்பமாய்.... பிரித்து போட மனமில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்க மலைத்து போய் இருக்கிறேன் எதை முதலில் சரி செய்யவென்று... கைப்பேசியில் தோழி அவள் கீழே விழுந்து கால் பிசகி சந்தோஷமாய் சயனித்திருப்பதை சொல்ல...   நமக்கு மட்டும் இப்படி நடப்பதில்லையே  என்கிற நினைப்பு சேர்ந்து கொண்டது அடுத்த குப்பையாய்...