Skip to main content

மனிதன் தான்...


 என் அடையாளம்...




பராபரமென்றும் பார்த்தனேயென்றும்
தூண் என்றும் துரும்பென்றும்
சகலமும் நீயே என்றும்
போற்றியும் தொழுதும் துதித்தும்
அனுதினமும் பூஜை செய்தும்
விரதம் இருந்தும்

இந்த மானிட பிறவியில்
நீ எதை எதையெல்லாம் பெற்றாயோ
எதை எதையெல்லாம் இழந்தாயோ
அதை அதையெல்லாம் நானும் பெற்றேன் இழந்தேன்

என் கடவுள்கள் உன் கடவுள்கள் இல்லை
என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள் 

நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்
இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...




Comments

  1. பகுத்தறிவு எனபது சில உண்மைகளை(யும்) ஏற்று கொள்வதாகும் நமக்கு தேவை ஒரு வழிகாட்டி அது மானசீக மாக இருந்தால் கடவுள், நிஜமாக இருந்தால் தாய் தந்தையர், ஆனால் வழிபாடு ஒன்று தான் ஆகையால் நல்ல கருத்து போல் தோன்றினாலும் பகுத்தறிவு வாதிகள் எல்லோரும் பார்த்தால் தங்கள் தாய் தந்தையரை வழிபாடு செய்வதன் மூலம் அதன் வழியே இறைவனை அடைந்து விடுகின்றனர் ஆகையால் எல்லா ஆறுகளும் கடலை நோக்கியே பயணிகின்றது ..என்றாலும் அருமையான கவிதை நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  2. வெகு நன்றாக உங்கள் கருத்தைக் கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள், அகிலா, பாராட்டுக்கள்

    கடைசி இரண்டு வரிகள் மனதை தொடுகின்றன.

    ReplyDelete
  3. என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள். அருமை. மனதைத் தொட்ட வரிகள்.

    ReplyDelete
  4. நச்சென்ற வரிகளுக்கு சொந்த காரி .......அற்புதம் தோழி நடமாடும் தெய்வங்கள் மட்டுமே போற்றுதலுக்குரியவர்கள்

    ReplyDelete
  5. //என் கடவுள்கள் உன் கடவுள்கள் இல்லை

    என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள்

    நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்

    இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...//

    அருமை. உண்மை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. /// என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள் ///

    இதற்கு மேல் என்ன வேண்டும்...?

    முடிவில் வரிகள் மிகவும் அருமை... உண்மை...

    ReplyDelete

  7. உங்களின் சிந்தனைக்கு பாராட்டு...எதையும் நம்மில் சீர் தூக்கி பார்த்து ஆக்கப்பூர்வமாக யோசிக்க்க வேண்டும்.. நல்ல சிந்தனைகளும், ஆராயும் மனப்பான்மையிம் இளஞர்களுக்கு முக்கியமாக தேவை..உங்களின் கவிதை நன்றாக பிரதி பலிக்கிறது...பாராட்டுகள்...


    நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்

    இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...//

    சபாஸ்....வாழ்க..

    ReplyDelete
  8. கடவுள் குறித்த அருமையான புரிதல் அகிலா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நிஜங்களே என்றும் நிலைப்பவை/

    ReplyDelete
  10. ஆம்..தாய் தந்தையரே நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள்! நல்ல கவிதை!

    ReplyDelete
  11. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென
    மொழிந்து நிற்கும் கவிதையை நான்
    வழிமொழிகிறேன் சகோதரி.....

    ReplyDelete
  12. நன்றி ராஜன்...

    ReplyDelete
  13. உங்களின் பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி மேம்....

    ReplyDelete
  14. மிக்க நன்றி பாலகணேஷ்...

    ReplyDelete
  15. சரளா....உங்கள் கவிதைகள் அழகுதான்...நன்றி பா....

    ReplyDelete
  16. உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே...

    ReplyDelete
  17. நன்றி சௌந்தர்...

    ReplyDelete
  18. என் அன்னையும் பிதாவும் மட்டுமே என் மனதில் இருப்பவர்கள்....நன்றி தனபாலன்....

    ReplyDelete
  19. எழில்...யாரையும் புண்படுத்தாத நாசுக்கான கவிதைதான் எழுதினேன்....நன்றி..

    ReplyDelete
  20. நன்றி விமலன்....

    ReplyDelete
  21. நன்றி வரலாற்று சுவடுகள்....

    ReplyDelete
  22. நன்றி மகேந்திரன்....

    ReplyDelete
  23. நிஜங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அருமையான கவிதை.வாழ்த்துகள் அகிலா !

    ReplyDelete
  24. நானும் உங்களுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன் ..

    கடைசி இரண்டு வரிகள் மிக மிக அருமை தோழி.

    ReplyDelete
  25. நன்றி ஆகாஷ்....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந