Monday, 12 October 2020

மிச்சமான மௌனம்





மழைச்சாரலில் ஒழுகும்  

முழுநிலவின் ஒளி,  

இலைகளின் மேனி தழுவும்; 

மரத்தின் பாதம் கண்டு வழியும்; 

மண்ணின் மீது விழுந்தெழும் காலம், 

மௌனமாய் கழியும்;

கற்களைத் 

துடைத்தெழும் பொழுதுகளில் மட்டும் 

துணுக்கிட்டு ஓலமிட காத்திருக்கிறது,

மிச்சமாய் வழியும் 

சத்தம் !! 

 

 

1 comment:

உங்க கருத்தை சொல்லலாம்.....