Skip to main content

நட்பின் வரைமுறைகள்



நட்பின் இலக்கணங்கள் சற்று மாறிப் போய்விட்டது இளைஞர்களிடையே..

தொலைதூர கல்வியின் செயல்முறை தேர்வு அறையொன்றில், இளைய தலைமுறை கூட்டமொன்று, பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுமாய் வந்திருந்தார்கள்.

தொட்டு பேசுதல் இப்போதெல்லாம் மிக சாதாரணமாகிப் போனது. அதையும் மீறி ஒரு பையன், அவன்தான் ரொம்ப ஸ்மார்ட்டாக எல்லோரிடமும் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தான், ஒரு பெண்ணின் கன்னத்தில் கன்னம் இழைத்து மேல்நாட்டவர் ஸ்டைலில் முத்தம் (எக்ஸாம்க்கு வாழ்த்து சொல்றாங்களாம்) செய்தபோது கூட தவறாக தெரியவில்லை (இதெல்லாம் தவறுன்னு நாம சொல்லவே கூடாதுங்க).

இன்னும் இரண்டு பெண்களுக்கும் இதே போலவே வாழ்த்துச் சொன்னான். அவனின் கை அப்போது அந்த பெண்களின் இடுப்பின் மீது அலைபாய்ந்ததைக் கண்ட போது, அவனின் மனதின் தன்மையும் அந்த பெண்கள் அதை சாதாரணப்படுத்துவதில் இருந்து, அதன் தேவையும் புரிந்துப் போனது.


சுதந்திரம் என்பது ஆண்களைக் கட்டிப்பிடிப்பதிலும், முத்தமிடுவதிலும், கொஞ்சுவதிலும் இல்லை என்பது இன்று பெண்களுக்கு, எல்லா வயதில் இருப்பவர்களுக்கும்தான், ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. ஆண் பெண் உறவை சகஜப்படுத்துதல் என்னும் கான்செப்ட் சரிதான். அதற்காக இப்படி செய்து நாம் நமக்கென கட்டிக் காத்து வந்திருக்கும் விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதெல்லாம் இல்லாமலேயே நாம் சுயமானத்துடன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்பதை பெண்கள் உணரவேண்டும்.  

இதனால், என்ன சிக்கல் வருகிறதென்றால், நாளை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகும் சமயம், கணவனையும் மற்ற ஆண்களுடன் இந்த விசயத்தில் ஒப்பீடு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதுவரை, பொருளாதாரத்தில் மட்டுமே ஒப்பீடு செய்துக் கொண்டிருந்தார்கள். ‘அவங்க வீட்டில் ஏசி வாங்கிட்டாங்க, கார் வாங்கிட்டாங்க’ என்றெல்லாம் நடந்துவந்தது. அதுவரை சரிதான்.

இப்படி இப்போதே தொடுதல் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால், இதிலும் அதே போல் ஒப்பிடுகள் பெருகி, உறவுகளுக்குள் நம்பிக்கையற்று போய்விடும் நிலை வருகிறது. இதுவே, மனவேற்றுமைகளும் விவாகரத்துகளும் பெருகும் நிலைக்கு வித்திடுகிறது.  

இளவயதில் இருக்கும் இவர்களுக்கு இந்த புரிதல் வரவேண்டும். நம் நாட்டின் பாரம்பரியம் போற்றி, மற்ற நாடுகளிலிருந்து காப்பி அடிக்காமல், அந்த ஒரு உறவையாவது சற்று புனிதப்படுத்திப் பார்ப்போமே.

அன்பை, நட்பை, அறிவை பகிர்ந்துக் கொள்ளுங்கள். தோழமையுடன் அளவுக்கு மீறிய தொடுதல் இன்றி பழகுங்கள். யாருடனாவது நெருங்கிப் பழகத் தோன்றினால், அதன் ஆழம் கண்டறியுங்கள். அந்த உறவு நீடிக்குமா, அதை இருவராலும் கடைசிவரை காப்பாற்ற முடியுமா என்பதெல்லாம் யோசித்து அவனை/அவளை உங்களுக்குள், ஒரு பந்தத்துக்குள் நுழைத்து வாழ்ந்துக் காட்டுங்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இழிவான ஒரு கருத்து அல்ல. அது உடலும் உணர்வும் ஒன்றுபட்ட ஒரு நிலையைக் குறிக்கும் வாசகம். அது யாரிடம் கைக்கூடுகிறது என்பதை ஆராய்ந்து நட்புகளைத் தொட அனுமதியுங்கள்.

குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் Good touch, Bad touch  போலதான் இதுவும். நீங்கள் குழந்தைகள் அல்ல. நீங்களே புரிந்துக் கொண்டு நட்பை நட்பாய் மட்டும் இருக்க விடுங்கள். நட்பின் அழகிய இலக்கணமும் அதுதான்.

நட்பின் இலக்கணம் மதித்து, சுயமானமும் பெண்மையும் விட்டுக் கொடுக்காமல், நிமிர்ந்து உயர்ந்து வாழ்ந்து காட்டுவோம்.




Comments

  1. நீங்கள் கவிதை அதிகம் எழுதுவது மாதிரி இது போன்ற பல விஷயங்களை அதிகம் எழுதுங்களேன் உங்களின் இந்த மாதிரி எழுத்துகளும் சிந்தனைகளும்தான் எனக்கு அதிகம் பிடிக்கிறது. இப்படிபட்ட விஷயங்களை படிக்கும் போது மனம் தெளிவடைகிறது.

    ReplyDelete
    Replies
    1. இனி சமூக சிந்தையுள்ள விஷயங்களையும் நிறைய எழுத முயற்சிக்கிறேன். உங்களின் ஊக்கமிகு எழுத்துக்களுக்கு மிக்க நன்றி..

      Delete
  2. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று அறியாமல் இன்னும் கட்டுப் பெட்டியாகவே இருக்கிறீரே? குழந்தை பெற்ற பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற அளவிற்கு தமிழ்ப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதில் இருந்தே இந்த தலைமுறையின் மீதான பிடிப்பு தெரிகிறது. என்ன செய்வது.. நானும் எதுவும் தெரியாமல் எழுதவில்லை. சில பண்பாடுகளையாவது காப்பாற்றும் முயற்சியில்தான் இதை செய்கிறோம். தேரப்போவதில்லை என எந்த குழந்தையையும் நோய்க்கு தாரை வார்க்க நாம் முன் வருவதில்லையே. அதுபோல் தான் இதுவும்.
      சமூகத்தில் புதிதாய் புல்லுருவிகள் முளைத்தால் கொஞ்சம் பிடுங்கி பார்ப்போமே என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இது.

      Delete
  3. அருமையாக யோசித்து, அழகாகவும், நயமாகவும், நியாயமாகவும், மென்மையாகவும் சொல்லியுள்ளதோர் கட்டுரை இது.

    இதைப்படித்து ஓர் சிலராவது விழிப்புணர்வு கொண்டால் மிகவும் நல்லது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி அய்யா..

      Delete
  4. நம் நாட்டின் பாரம்பரியம் நாமே காக்க வேண்டும்... நம் நாட்டின் சிறப்பே அது தான்... /// உடலும் உணர்வும் ஒன்றுபட்ட ஒரு நிலை /// இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை... பாராட்டுகள் சகோதரி...

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக எழுதிருக்கீங்க அகிலா. ரொம்ப நன்றி. இன்றைய காலத்தில், பேருந்து, ஷேர் ஆட்டோ, ரயில்களிலும் ஆண்களும் பெண்களும் அருகருகே அமர்வதும் எனக்கு உடன்பாடில்லை. இதைச் சொன்னால் இந்த முஸ்லிம்களே இப்படித்தான், மிகுந்த பிற்போக்குவாதிகள் என்று பெயர் சூட்டப்படுகிறேன். :-(

    ReplyDelete
    Replies
    1. இதில் இவர்கள் நினைப்பது போல் பிற்போக்குவாதம் ஏதும் இல்லைதான். இதெல்லாம் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளுக்குள் வைத்துக் கொள்ள உதவும் விஷயங்கள்தான். இதற்கும் பெண் சுதந்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. புரிதலுக்கு இன்னும் ஆண்டுகள் எடுக்கும் தோழி...

      மிக்க நன்றிப்பா..

      Delete
  6. சுதந்திரம் என்ற பெயரில் நட்பின் எல்லைகள் தாண்டப்ப்படும்ப்போது அதன் விளைவு பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கிறது. இதை பெண்களும் பெறோரும் புரிந்து கொள்ள வேண்டும் நல்ல பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந