Skip to main content

தோழிகள்...




பாண்டி விளையாடிய போதும்
பல்லாங்குழி ஆட்டத்தின் போதும்
பிரகாரம் சுற்றும் போதும்
தண்டவாளத்தில் இணையாய் நடக்கும் போதும்
தட்டாமாலை சுற்றி விழுந்த போதும்
பள்ளியின் படிகளில் தடதடத்து ஏறி
மூச்சு வாங்க நின்ற போதும்
கை கோர்த்தத் தோழிகள் வேறு...

சரிந்த தாவணியை இழுத்து விடும் போதும் 
தினமும் மதிய சாப்பாட்டை மாற்றி சாப்பிட்ட போதும்
பேருந்தில் இருவர் இருக்கையில்
மூவராய் அமர்ந்து பட்டாம்பூச்சிகளான போதும்
காசில்லாமல் கான்டீன் வடையைப் பாதியாக்கிய போதும்
செமஸ்டரில் அரியர்ஸ் விழுந்தால்
சினிமா போய் துக்கத்தை சரி செய்த போதும்
கைக் கோர்த்தத் தோழிகள் வேறு...

பிள்ளையை பள்ளியில் விடப்போய்
புத்தகங்கள் பரிமாறி கொண்ட போதும்
விசேஷங்களுக்கு உதவிப் பண்ணிக் கொண்டும்
உடல் நலமில்லாத போது கவனித்துக் கொண்டும்
இரவின் ரகசியங்கள் கூட பகிர்ந்துக் கொண்டும்
கைக் கோர்க்கும் தோழிகள் வேறு...

இத்தனை தோழமைகளிலும்
பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே
பால்யமாய் இன்னும்...


Comments

  1. //பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே பால்யமாய் இன்னும்...//

    அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி சௌந்தர்...

      Delete
  3. தோழிகள் வேறு...

    இத்தனை தோழமைகளிலும்
    பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே
    பால்யமாய் இன்னும்...
    மின்னும் தோழமை அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ராஜேஸ்வரி....

      Delete
  4. பால்யத்துக்கு அழைத்து சென்றது உங்க கவிதைகள்.

    ReplyDelete
  5. ஆமாம் அகிலா பள்ளித்தோழமை எந்தக் காலத்திலும் மறப்பதில்லை...அது மட்டும் தான் எந்த வித கபடமும் தெரியாத இயல்பான நட்பு...அருமை..உங்களை கணினி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன் கவனித்தீர்களா?..நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....பார்த்தேன் எழில்...தோழி சொல்லி மறுப்பு உண்டா என்ன...எழுதுகிறேன்...

      Delete
  6. நினைவுகளை பின்னோக்கி நகர்த்திய பதிவு... அருமை..

    ReplyDelete
  7. நட்பு தினத்தில் வெளிவந்த தோழி கவிதை நட்பை அழகாக சொல்லிஸ் சென்று இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பா...

      Delete
  8. எவ்வுளவு தான் வசதி வாய்பாக வாழ்தாலும் தங்கள் வளர்ந்த சூழ்நிலை போலவோ பால்ய காலத்து இடங்கள் போலவோ எதச்சையாக பார்க்கும் போது மனது ஒட்டி கொள்கிறது காரணம் .கொஞ்சம் யோசித்து பார்த்தால் நாம் எங்கேயோ தொலைத்த வாழ்க்கையை எங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறோம் ஆடி ஓடிய காலங்கள் யாவும் அடங்கி ஒடுங்கி மனதின் அடிஆழதிற்குள் சுருங்கி போயிகின்றன நாகரீகத்தின் பரிணாம கோடுகளால் அவை நிரந்தரமில்லாமல் மாறி கொண்டே இருக்கும் பரிணாம நட்புகள்

    ReplyDelete
    Replies
    1. தொலைந்து போனவைதான்...ஆனாலும் பொக்கிஷமாய் அமைந்தவை...நன்றி ராஜன்..

      Delete
  9. எத்தனை நட்புக்கள் வந்தாலும் சிறுவயது நட்புக்கு என்றும் மதிப்பு ஜாஸ்திதான்...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. அதில் பொய் கிடையாது...அன்பும் கோபமும் கலந்தே இருக்கும்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந