Skip to main content

வாயுள்ள பிள்ளை தான்...






பேசாமலே படுத்திருந்தது படிக்கட்டில் 
சாம்பலில் வரிகள் அணிந்த அந்த கறுப்புப் பூனை 
எஜமானியம்மா வருவதை உறுதி செய்தது அதன் காதுகள் 
மெல்லக் கண் திறந்துப் பார்த்துக் கொண்டிருந்தது...

பெரிய கிண்ணியில் பால் வைத்திருந்தாள் 
கொல்லைப்புறத் தட்டியை திறந்து 
குரைத்துக் கொண்டிருந்த அந்தக் கொழுத்த நாயின் தட்டில் ஊற்றினாள் 
மறுபடியும் உள்ளே சென்று வந்தாள்... 

கண்ணாடிக் குடுவை முழுவதும் தானியங்களை சுமந்து வந்து 
கொக் கொக் என்று குரலெழுப்பிக் கொண்டிருந்த
கோழிகளின் கூடாரத்தைத் திறந்துவிட்டாள்... 

இருட்டில் இருந்து வெளிச்சத்தை பார்த்து மிரண்டு 
ஆளுக்கொரு திசையாய் ஓடின அவை...  
விரிந்த டப்பா ஒன்றில் தட்டினாள் தானியங்களை 
அடித்துபிடித்து பறந்து வந்தன ஓடிப் போனவைகள் 
மறுபடியும் உள்ளே சென்று வந்தாள்...  

கையில் ஒரு காப்பிக் கோப்பையும் பிஸ்கட் தட்டுமாய்
திண்டில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்...

பூனை மெதுவாய் ஒன்றரைக் கண் வழியே பார்த்தது 
தன்னைக் கவனிக்காதக் கோபம் தலைத் தூக்கியது  
புர் என்று சத்தம் எழுப்பியது 
கவனிக்காமல் காப்பியை ஊறிஞ்சிக் கொண்டிருந்தாள்...
  
எழுந்து சென்று அவளின் காலில் உரசியது உடம்பை 
மியாவ் என்று குரல் கொடுத்தது  
குனிந்துப் பார்த்து அதை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்...

எழுந்துட்டியா என்று ஆச்சரிய குரல் கொடுத்தாள் 
கொஞ்சம் காப்பியை சாசரில் ஊற்றினாள் 
பூனையும் குடித்துத் தொடங்கியது ஆவலுடன்...   



Comments

  1. அழுகிற பிள்ளைதானே பால் குடிக்கும் ??!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...சரிதான் தோழி...

      Delete
  2. காப்பியை விரும்பும் பூனையை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கத்து வீட்டு பூனை காப்பிக் குடிக்கும்...அதுதான் இதுக்கு விதை...

      Delete
  3. கொடுத்து வச்ச பூனை .மடியில் உட்கார்ந்து காப்பி குடிக்கும் அதிஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. மற்றவற்றை விட அதற்கு உயர்வான இருக்கைதான்...நன்றி

      Delete
  4. அருமையாகச் சொன்னீர்கள்
    நாம் பிற ஜீவன்களை எப்படித்தான்
    வளர்த்தாலும் பூனை போல
    பிற உயிரினங்கள் உரிமை
    எடுத்துக் கொள்வதில்லை
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதன் குழைவு வேறு எந்த விலங்குக்கும் வராது ...நன்றி உங்களுக்கு...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...