Skip to main content

அட போங்கப்பா....




இடம் பொருள் என்கிற சுயம் இல்லாமல் 
உணவு உடை என்கிற சிரத்தை இல்லாமல் 
உறவுகளின் உரசல்கள் இல்லாமல் 
எல்லாம் துறந்து 

தனியாய் யாருமில்லா வானாந்தரத்தில் 
மனதுக்கு மட்டும் நெருக்கமாய் 
காற்றோடு சேர்ந்து காணாமல் போய் 
லேசாகி தொலைய நினைப்புதான்...

நினனவு கலைந்து 
கண் திறந்தால் 
கல்லும் மண்ணுமாய் 
இந்த உலகம் கண்முன்னே 
அட போங்கப்பா.....



Comments

  1. நியாயமான வெறுப்புத்தான். சில சமயங்களில் என்னையும் ஆட்கொண்டதுண்டு. உணர்வுகளை எழுத்தில் கடத்திவிடும் உங்களுக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் தோன்றும் பாலகணேஷ்....

      Delete
  2. சுவாரஸ்யமே இல்லை என்றால் இப்படி தான்...

    நாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் - பலவற்றை...

    இல்லை என்றால் அடப் போங்கப்பா...

    ReplyDelete
    Replies
    1. எங்கே தனபாலன்...
      ஒரே வேலையை எப்படி மாற்றி செய்தாலும் அதே போர் அடிக்கிறதே...

      Delete
  3. சண்டை போட தயாராய் இருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. //உறவுகளின் உரசல்கள் இல்லாமல்
      எல்லாம் துறந்து//
      அப்படி ஏதாவது ஒரு நாள் கண்டிப்பாய் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.அப்போது தெரியும் எதற்காக வாழ்கிறோம் என்று.
      //தனியாய் யாருமில்லா வானாந்தரத்தில்//
      ஒரே ஒரு நாள் வானொலி,தொலைகாட்சி,நிலைபேசி,செல் பேசி என அனைத்தையும் அணைத்து விடுங்கள்(மின்சாரமின்றி அப்படிதானே இருக்கிறோம் என்பது கேட்கவில்லை எனக்கு). முதல் நாளே வீட்டிலுள்ள எல்லோரிடமும் "நாளை ஒருநாள் யாரிடமும் பேச மாட்டேன்.ஒருநாள் மட்டும் யாரும் உங்களிடமும்(அகிலா) பேச வேண்டாம்" என்றும் சொல்லி விடுங்கள்.தனியறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொள்ளுங்கள்.கழிவறையும் சேர்ந்தமைந்த தனியறை எனில் எதற்காகவும் மறுநாள் வரை கதவை திறக்காதீர்கள்.அப்புறம் வனாந்திரம் பற்றி யோசிக்கலாம்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கல்லிலும் மண்ணிலும்
    இருந்து தான் உலகம் தோன்றியது

    உலகம் தோன்ற்றியதனால் தான்
    மனிதன் தோன்றினான்

    மனிதன் தோன்றியதனால் தான்
    உறவுகள் தோன்றியது

    உறவுகள் தோன்றியதனால் தான்
    அன்பு தோன்றியது

    அந்த அன்பு ரசம் எத்தனை
    பருகினாலும் சலிப்பு இல்லாதது ..

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  6. love can overcome quarrels, depression and even stress.
    காற்றோடு காற்றாக கலந்து போனாலும்
    உறவுகளின் உரசல்கள் இல்லாமல் போனாலும்
    நாம் பந்த பாசங்களால் பிணைக்க பட்டு இருகிறோம்
    சிலவை சலிப்பாக தெரிந்தாலும் உண்மையில்
    அவை சுகமான சுமைகளே ..
    நல்ல கவிதை வரிகள் பாராட்டுக்கள் ..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி