Skip to main content

நம்ம ஊர் தபால் நிலையம்.....




Chennai HPO
                       


                        நமது ஊரில் இருக்கும் தபால் நிலையங்களை பார்த்து ஆச்சரியபடாமல் இருக்க முடியாது. சிறிய பகுதிகளை உள்ளடக்கிய தபால் நிலையங்கள் நமக்கு பக்கத்து வீடு மாதிரி. 

                       அவ்வளவாக கூட்டம் இருக்காது. உள்ளே போய் நம்ம பகுதியின் தபால்காரரை பார்த்து இப்போ லெட்டர் பாக்ஸ் வைத்துவிட்டோம், இனிமேல் அதிலேயே போட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டு வரலாம். இந்தியா டுடே இல் இருந்து VPP பார்சல் வந்தால் வீடு வரைக்கும் தூக்கிட்டு வரவேண்டாம், இங்கிருந்தே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று தபால் பிரிப்பவரிடம் சொல்லலாம். போன் பில் கட்ட போனால், அங்கேயே புதிதாக கிடைக்கும் ஒரு தோழியிடம் ஊர் கதை உலக கதை எல்லாம் பேசி நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் கழித்துவிட்டு அவர்கள் பையனை நம்மிடம் டியுஷனுக்கும் சேர்க்க வைத்துவிடலாம். 

                      மாதா மாதா கட்ட வேண்டிய  RD யை கட்டாமல் மூன்று, நான்கு மாதம் சேர்த்து கட்ட போனால் கண்டிப்பாக உள்ளே RD கட்டுகிற பிரிவில் இருப்பவர் கொஞ்சம் முகம் மாறுவர். ஏன்னா, பெரிய பெரிய அக்கௌன்ட் புத்தகத்தை எடுத்து அதில் ஒவ்வொரு மாதத்துக்கும் சீல் அடிக்க வேண்டும் (இப்போ எல்லா தபால் நிலையத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது) . அதனால் என்று நமக்கு கடைக்கு போக வேண்டுமோ அன்று தபால் நிலையத்தில் நம்ம RD புத்தகம், கட்டவேண்டிய பணம் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு டைம் கிடைக்கும் போது போட்டு வைச்சிருங்க...நான் ஒரு மணி நேரத்திலே வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டா  போதும். சமத்தா வேலையை முடிச்சிருவார். 

                        இதெல்லாம் city  இல் இருக்கும் தபால் நிலையத்தில் நடக்காது. நான் சென்னையில் இருந்த போது குரோம்பேட் சிட்லபாக்கம் தபால் நிலையத்தில் இதெல்லாம் சாத்தியபட்டிருக்கிறது. கோயம்புத்தூரில் காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் இருந்த தபால் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். பேருந்து நிலையத்தை விட சத்தமாக இருக்கும். 




Kovaipudur PO



                    ஆனால் கோவைபுதூரில் உள்ள தபால் நிலையம் அமைதியாக இருக்கும். 'நீங்க எங்கே R  Block  இல் இருக்கீங்களா?'  என்று விசாரித்து கொள்ளலாம்....'இன்னைக்கு நாக பிள்ளையார் கோயிலில் விசேஷம்...சாயங்காலம் பார்க்கலாம்...' என்று தகவல் பரிமாறிக்   கொள்ளலாம். அங்கிருக்கும் நாற்காலியில்  உட்கார்ந்து, 'யாரு சொன்னது....நம்ம அம்மாவா...இல்ல உங்க அம்மாவா....' என்று அரசியல் கூட பேசலாம்.... 

நம் அரசாங்கத்தின் சொத்து நம் சொத்துதானே...அதுக்காக வித்துராதீங்க....பத்திரமா பாத்துக்குங்க.....  







Comments

  1. தபால் நிலையங்களைப் பத்தி ஒரு ஆராய்ச்சியே பண்ணியிருக்கீங்க போல... இன்னிக்கு தபால் எழுதற பழக்கமே குறைஞ்சுட்டு வருதுன்னும் ஒரு வரி சேர்த்திருக்கலாம் நீங்க. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி....கடிதம் எழுதுவது குறித்து ஒரு தனி பதிவே எழுதலாம்ன்னு இருக்கேன்....உண்மையிலே ரொம்ப வருத்தமான விஷயம்தான் அது....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந