Skip to main content

கோ - The Real King




கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை.  காரணம் என்னவென்றால்,
  • ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை.
  • ஏதாவது ஒரு profession கையில்  எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )


 நிறைய recommendationsக்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன்.





இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு  லாவகமாக கையாண்டதற்கும்,  இதை இயக்கிய விதத்திற்காகவும்   டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்....
அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்....its a hit...


டைரக்டர் K V Anand




நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார். இரண்டு heroines கிட்டேயும் ஒரே மாதிரி look கொடுக்காமல், வித்தியாசப்படுத்தியிருக்கார். நிறைய  ஹிரோகள் செய்யிற தப்பு அதுதான். கடைசியில் 'நான் உன்னை லவ் பண்ணல்ல...அவளத்தான் லவ் பண்ணினேன்...'என்று சொல்லி நம்மையும் சேர்த்து குழப்புவார்கள்.....





அடுத்தது அஜ்மல்... பெரும்பாலும் character names எல்லாம் என் தலையில் நிக்கவே நிக்காது...ஆனால்  வசந்தன் என்கிற character  nameயை பதிய வைத்திருக்கிறார். அந்த character யை  அழகாகவும் தோரணையோடும்  செய்திருக்கிறார். 





கார்த்திகா அவங்க அம்மா ராதாவை போல் நல்ல உயரம்,  அதே முகஜாடை. ராதாவுக்கு நடிக்க தெரியாது, நளினம் கிடையாது, வெறும் celluloid பொம்மைதான் , ஆனால்  கார்த்திகா ஒகே.
Spring hair பியா பரவாயில்லை. எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிப்பு பாணி தெரியுது. மாத்திக்கலாம்.


கதையோட க்ளைமாக்ஸ் தான் உண்மையான ஹீரோ. 


மீடியா, பத்திரிகைகள் எல்லாம் இன்று உண்மையை தொலைத்து, creativity என்ற பெயரில் கற்பனையாகவும் கட்டு கதைகளாகவும் எழுதுவது மட்டும் அல்லாமல், paid news போன்றவற்றையும் செய்யும் போது, ஜர்னலிசத்தின் மூலம் நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியும் என்று காட்டபட்டிருக்கிறது.  


அரசியல், காவல் துறை, மிலிடரி  போன்றவற்றில் இருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்கு நல்லது  செய்வதாக அனேக படங்களில் பார்த்திருக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் போடோக்ராபர் மற்றும் ஜர்னலிஸ்ட் தொழிலில் இருப்பவர்கள்கூட நாட்டுக்காக தன் அர்ப்பணிப்பை அளிக்க முடியும் என்று அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.


இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்புகிறோம்.  இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பழைய கிழ பெருச்சாளிகளை, வாரிசு அரசியலை  ஒழித்து, நல்ல ஜனநாயகம் நாம் நாட்டுக்கு அமையாதா என்று கூட தோன்றுகிறது.


Really the word கோ means  







Comments

  1. சரியாகச் சொன்னீர்கள்..
    இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனச் சொன்ன
    அருமையான படம். அரசியல் சாயம் இல்லாதவர்கள் வரவேண்டும் என்பது மிக முக்கியம்.

    ReplyDelete
  2. ஆமாம்...இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்....ஆனால் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு உண்மைதான் -'இப்போதைய நம் நாட்டின் சூழலில் தவறுதலான வழிமுறையை பின்பற்றித்தான் இளைஞர்களும் அரசியலுக்குள் வரமுடியும்...' - வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete
  3. "ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை" - my cousin brother may not agree with this statement - being a childhood friend of Jeeva alias Amar. Not sure whether you have seen the performance of Jeeva in 'Katarathu Tamil'. He has the potential.

    ReplyDelete
  4. I hadnt seen the movie 'Katrathu Tamil'. His earlier movies mostly project him as a silly young chap always in smile. So I had such opinion. After seeing this movie, I really appreciate him. He matured a lot.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந