Skip to main content

ஊழலும் உண்ணாவிரதமும்

                   

                  அன்னா ஹசாரே என்ற ஒரு தனிப்பட்ட மனிதரை, ஒரு காந்தியவாதியை பற்றி ஒரு நாளுக்கு இரு முறை தினசரிகளும், ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை தொலைகாட்சிகளும் கடந்த 13 நாட்களாக அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. அவரின் உண்ணாவிரதம் லஞ்சம் என்னும் பெரும் பூதத்தை எதிர்த்துதான். ஊழலை ஒழிக்க அவர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட படவேண்டியதுதான். அதன் முடிவாக மத்திய அரசு லோக்பால் பில்லை கையில் எடுத்திருக்கிறது.

                  ' இனிமேல் இந்தியாவில் ஊழலே யாரும் செய்ய முடியாது. செய்தாலும் தப்பிக்க முடியாது. .......'இப்படித்தான் ராம்லீலா மைதானம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பேசிக்கொண்டு, இந்த 13 நாள் விசேஷத்தை கொண்டாடி முடித்துவிட்டு, 'அப்பாடா ஒரு பெரிய வேலை முடிந்தது' என்று  எல்லோரும் வீட்டிற்கு போய் நிம்மதியாக தூங்கிவிட்டார்கள்.

                  நன்றாக நடந்தேறியது இந்த நாடகம். இதில் எத்தனை வர்த்தக நிறுவனங்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதை ஆராய ஒரு கமிஷன் போட்டால் தேவலை.

                   நம் இந்திய அரசாங்கம் என்பது நாட்டில் ஏற்படும்  பிரச்சனைகளை சமாளிக்க  அவ்வப்போது bill pass செய்வதும், committee அமைப்பதும், அதன் பிறகு அதை தூக்கி குப்பையில் போடுவதிலும்  பேர் போன ஓன்று. இந்த Lokpal Bill ஒன்றும் அதற்கு பெரிய விஷயமில்லை.



                   இலட்சக்கணக்கான  மக்கள் கூட்டத்தை காண்பித்தார்கள். நம் படித்த அறிவாளி மக்கள் இதை Facebook Followers கூட்டம் என்று நினைத்து ராம்லிலாவில் குவிந்துவிட்டார்கள்.

                   நம் நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள், விலைவாசி ஏற்றம், கல்வி கட்டண உயர்வு, பெட்ரோல், எரிவாயு விலை ஏற்றம் போன்ற பிரச்சனைகளால்  சமுதாயத்தின் மீது ஏற்பட்ட கோபத்தை 'ஊழல் ஊழல்' என்று கத்தி தீர்த்து கொண்டார்கள். Simply Mob Frenzy....

                  முதலில் அன்னா ஹசாரே சாதாரணமாக தான் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார். Media அதை பெரிதாக்கி தனக்கு சாதகமாக்கி கொண்டது. அவராலும் வெளியே வரமுடியாத சூழ்நிலையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தது Times Group போன்ற பெரிய வர்த்தக திமிங்கலங்கள்.



                    ஒரு வயதான மனிதர் ஆகாரம் இல்லாமல் 13 நாட்கள் கழித்து தெளிவாக எழுந்து எப்படி  கை ஆட்டவும் பேசவும் முடியும்? எல்லாம்  Electrolytes இன் மாயம் தான். இனிமேலும் கூட அவரை இந்த திமிங்கலங்கள் பயன்படுத்தலாம். தயவு செய்து அவரை யாராவது ஒளித்து வைத்துவிடுங்கள்.



                Team Anna என்று சொல்லிக்கொண்டு இருக்கும் சிலர், பெரிய பிசினஸ் நிறுவனங்களிடம் பணம் பெற்றுதான் தங்களுடைய NGOs சமுக சேவை அமைப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்னாவின் இந்த உண்ணாவிரத காட்சிகளுக்கும் அவர்கள்தான் பணத்தை இறைத்திருக்கிறார்கள்.



                       மக்கள் நினைப்பது மாதிரி அரசியல்வாதிகள் மட்டும் ஊழலுக்கு பொறுப்பில்லை. அவர்கள் வெறும் பொம்மைகள்தான். Corporate எனப்படும்   வர்த்தக கூட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கை பொம்மைகளான NGOs  (Non Governmental Organizations)  நடத்தும் விபரீதமான விளையாட்டுதான் இந்த ஊழலும் உண்ணாவிரதமும்....

                      நம் இந்திய நாடு என்பது அழகான குடியாட்சி நடக்கும் ஜனநாயகம். இதில் குழப்பம் உண்டு பண்ணுவதும், காந்தியவாதியான அன்னா ஹசாரே போன்றோரை உபயோகிப்பதும், மக்களை முட்டாளாக்குவதும் சரியில்லை.  அரசியல்வாதிகளுக்கும்  உங்களுக்கும் இடையில்  பிரச்னை என்றால் அதை நேருக்கு நேர் தீர்த்து கொள்ளுங்கள். மொத்தமாக இந்தியாவை பழிவாங்காதீர்கள்.





  

Comments

  1. இந்நிலை இப்படியே சென்றால் இந்தியாவின் நிலை கேள்விக்குறிதான்...

    இந்தியாவை காப்பாற்றுவோம்...

    ReplyDelete
  2. நிஜம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை நாம் நிப்பாட்ட வேண்டும். அப்போதுதான் நம் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந