Skip to main content

காந்தியவாதிகளும் உண்ணாவிரதமும்





லஞ்சம் 
                சில மாதங்களாகவே லஞ்சம் (corruption) என்னும் பூதத்தை எதிர்த்து நம் நாட்டில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் உண்ணாவிரதம் இருப்பதும், போலீஸ் அவர்களை கைது செய்வதும், மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும், அரசியல்வாதிகள் lokpal bill யை (அதன் முழு சாராம்சமும்  நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை; உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கே புரியுமா  என்பது  கேள்விக்குறி) நிறைவேற்ற போவதாக கூறிக்கொண்டே அதில் சுகமாக குளிர் காய்வதும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

                     இந்த லஞ்சம் என்பது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டும் tension யை கொடுப்பதில்லை. கொடுக்க தெரியாதவர்களுக்கும் வாங்க தெரியாதவர்களுக்கும் கூட பிரச்னைதான். லஞ்சத்தால் நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. நம் நாட்டு பொருளாதாரம் சீர்குலைகிறது.  Living Gandhi என்ற  புதியதொரு பட்டத்தை பெற்றிருக்கும் அன்னா ஹசாரே சொல்வதும் சரிதான். இதற்கென்று பல சமூக வலைப்பின்னல் தளங்களில் Like button எல்லாம் வைத்து அதற்கு ஏக மரியாதை.


வன்முறை




                              இதில் என் கருத்தை நான் இங்கே பதிக்க விரும்புகிறேன். முதலில் லஞ்சம், விலைவாசி போன்றவற்றை எல்லாம் விட முக்கியமான ஓன்று நம் கண் முன்னே தினமும் நடைபெறுகிறது. அதுதான் வன்முறை.

                            குடிப்பவன், சீட்டாடுபவன், தாதாக்கள், கொலைகள் செய்யும் கூலிப்படைகள்...இதையெல்லாம் எதிர்த்து கேட்பதற்கு ஆள் இல்லை. ஒரு வாரத்திற்கு முன் கோவையில் டிராபிக் அதிகம் உள்ள சாலையில் குடி வெறியில் ஒரு கொலை நடந்திருக்கிறது. டாஸ்மாக்கை முடச் சொல்லி போராட ஒருவரும் இல்லை.

                            டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேஷ் போன்ற மாநிலங்களில் நடக்கும் Honour Killings பற்றி கவலைப்பட்டு யாருமே உண்ணாவிரதம் இருப்பதில்லை. பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க ஆளில்லை. மும்பையில் அவ்வவ்போது நடக்கும் குண்டு வெடிப்புகளை சரி செய்ய யாரும் முன்வருவதில்லை.

                             இவர்கள்  யாருக்கும்  வன்முறையை தட்டி கேட்கும் தைரியம் கிடையாது.  வன்முறையாளர்களை   எதிர்த்து யாரும் உண்ணாவிரதம் இருக்க முடியாது. அவர்கள் இருக்க விடமாட்டார்கள். இதுதான் நிஜம். நம் சமுதாயத்தில் இருந்து வன்முறை  களையபடாமல், லஞ்சம் ஒழியாது. விலைவாசியும் இறங்காது.

                               வன்முறையாளர்களின் நினைப்பில் கத்தியும் துப்பாக்கியும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கும் போது, கண்ணில் பார்க்க முடியாத லஞ்சமும் விலைவாசியுமா அவர்களை பாதிக்க போகிறது...








  



Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி