Skip to main content

வரலாற்றின் மிச்சங்கள் - ரபி அரண்மனை

 இங்கிலாந்து - ரபி அரண்மனை 

(Rabi Castle, Durham County, England)



          வரலாறு என்னை எப்போதும் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அரண்மனைகள், கோட்டைகள், போர்கள் போன்றவை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பெருமைகள், சோகங்கள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. நானும் அந்த விழுமியங்களின் எச்சம்தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. நாகரிகங்களின் வரலாற்றின் வாசகனாக எனக்குள் ஒரு விழைவு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

            இந்த முறை லண்டன் புத்தகத் திருவிழாவின் சந்திப்பில் புலம் பெயர்ந்த எழுத்துகள் குறித்து பேசிய எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களிடம் நான் வைத்த கேள்வி இதுதான்: ஏன் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் இங்கிருக்கும் வாழ்வுமுறை உணர்த்தும் படைப்புகளைத் தருவதில்லை? என்பதுதான். அங்கு வந்திருந்த எழுதும் விருப்பமுள்ள இளம் தலைமுறையினர் இருவர் எழுத முற்படுவதாகத் தெரிவித்தனர். வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. படைப்புகளின் மூலம் ஒரு நாட்டின் நுணுக்கமான விவரங்களை அறியும் வாய்ப்பு வாசிப்பாளர்களுக்குக் கிட்டும். 

      வரலாற்றின் மீது இருக்கும் ஆர்வத்தினால்தான், என் பயண நூலான 'இங்கிலாந்தில் 100 நாட்கள்'  புத்தகத்தில் இங்கிருக்கும் கோட்டைகள் குறித்து ஓர் ஆய்வே செய்து எழுதியிருப்பேன்.

   'தவ்வை' நாவலுக்குப் பின்பு, ஜூலை மாதத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகவிருக்கும் எனது இரண்டாவது நாவலான 'அறவி' புதினத்திலும் சிறு வரலாறு ஒன்றை இணைத்திருக்கிறேன். 

   என் அடுத்த நாவல், வரலாற்றை, அதுவும் இங்கிலாந்தின் வரலாற்றை, மையப்படுத்தியே இருக்குமென நம்புகிறேன் (எழுதும் பொறி உள்ளே கனன்று கொண்டிருப்பதால், எழுதுவேனென நம்புகிறேன்.. நம்புவதுதானே நடக்கும்..)


ரபி அரண்மனை 

      நேற்று இங்கிலாந்தில் டர்கம் கவுண்டியில் (Durham County) இருக்கும் ரபி கேஸிலுக்கு (Rabi Castle) சென்றிருந்தபோது, இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வந்த அய்னிக் கேஸிலைப் (Ainwick Castle) போலவே இதுவும் ஒரு வாழும் அரண்மனை. Living Castle என்பார்கள். இன்னும் அரச குடும்பத்து வம்சாவழியினர் வசித்து வருகிறார்கள் என்பதே. சில பகுதிகளை அவர்கள் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு விட்டுவைத்திருப்பார்கள். 

     இந்த ரபி அரண்மனையின் வரலாறும் மிக பெரியது. வீரம், அரச பதவி, அரசியல், பழிவாங்கல், பெண்களின் கதைகள் என்று பலவற்றைச் சுமந்திருப்பது. நிச்சயம் அடுத்த பயண நூலில் இவை இடம் பெறும். 

     அதன் பெரிய கூடங்கள், Barons hall, விரிந்து பரந்திருக்கும் தோட்டம், மான்களின் கூட்டம் இவையெல்லாம் ஏற்படுத்திய பாதிப்பைவிட அந்த கோட்டையின் தினசரி உள்ளியக்கம் (சமையல், பணியாளர்கள் முதல் ராணிகளின் ராஜ்ஜியம்) சார்ந்த விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எல்லாமே திட்டமிட்டப்படி அட்டவணை போடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. இதுபோலவே ஸ்டெர்லிங் (Sterling) அரண்மனையிலும் சில விஷயங்கள் ( இது குறித்து 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' புத்தகத்தில் இருக்கும்) என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. 


புகைப்படங்கள்: 



















 எழுத்தாளர் அகிலா


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி