Skip to main content

'தவ்வை' நாவல்

 தவ்வை நாவல் 





கொரொனா காரணமாக வெகு மாதங்களாக வெளிவர முடியாமல் தாமதமான என்னுடைய முதல் நாவல் தற்போது வெளிவந்துள்ளது. 

டிஸ்கவரி புக் பேலசின் வெளியீடாக வந்துள்ளது. 

விலை ரூ 250 மட்டும்.. 

டிஸ்கவரியின் ஆன்லைன் லிங்க் இதோ : 

தவ்வை 

இங்கு சென்று புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். 


தவ்வை என்றால் கொற்றவை, பெண் தெய்வம். 

என்னுடைய முன்னுரையில், 


"பிட்டம் பருத்து, கைகள் பலவுடன் நிற்கும் கொற்றவையைக் காணுங்கால், விழைவொன்று கொள்கிறாள். அவளிடத்தில் போகவும் அல்லது அவளாகவே மாறவும் ஆன விழைவு அது. அவள் வாழ்ந்த காலத்திலோ, அவளின் வாழ்விலோ அவளிடத்தில் நாம் வாழ்ந்தால் என்னவெனவும் யோசிக்கிறாள். அவளின் கால் அழல்களுக்கு கொத்தாய் குங்குமமிட்டு, இரத்தப்பிழம்புடன் ஆன உடலை அவளுக்கு அர்ச்சித்து, கச்சை இறுக்கிய அவளின் மார்பகங்களில் பெருங்காடுண்டு உறைந்து வாழ்ந்துவிட இன்றைய பெண்ணும் ஏங்குகிறாள். இந்நிலைதான் பெண்ணென பெரிதாய் சொல்கிறது. இக்கூற்றில் வடிந்து பிறந்த பெண்ணே தவ்வை என்னும் இப்பெருஞ்சித்திரத்தின் நாயகி. "


எழுத்தாளர் திரு சு வேணுகோபால் அவர்களின் அணிந்துரையில், 


"பகிர்ந்துக் கொள்ள முடியாத மன அழுத்தத்தைப் பகிர்ந்துக்கொள்ள செல்லியம்மன் தெய்வத்தை நாடுகிறாள். அந்த செல்லியம்மன் தன்னை ஏற்றுக்கொள்வதாக உணர்கிறாள். எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய் பார்க்கிறாள். கொற்றவை தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண் தெய்வங்களுக்குத் தெரியும். தன்னை ஆதித்தாயின் ஒரு துளியென உணர்கிறாள் தவ்வை. ஆதித்தாயின் வடிவம் ஆற்றல் மிக்கது. மனக்குழப்பத்தால் பீடிக்கப்படாதது. இங்கு தனக்கான ஒரு விடுதலைத் தேடிக்கொள்கிறாள். "


Thavvai Book Link 





வாசித்து கருத்துரைக்கவும்.. 

நன்றி 


~
அகிலா  


Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந