Skip to main content

பிக் பாஸ் - சிக்கல்கள்

பிக் பாஸ்
~ அகிலா..





எழுதிவைத்து நடத்தப்படுகிறதோ எழுதாமலே நடத்தப்படுகிறதோ, எதுவாகினும் மனித உறவுகளை வைத்து பின்னப்படும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன பிக் பாஸில்.

நிஜத்தில், இம்மாதிரி நடந்தேற நாட்கள் பிடிக்கலாம். இன்னும் பல சூழல் சிக்கல்கள் இடைபுகலாம். அதிகமான மனிதர்கள் உட்புகலாம்.

அதுமாதிரி அல்லாமல், குறிப்பிட்ட சூழலுக்குள், எண்ணிக்கையில் சிறியதான நபர்களிடையே நடைபெறுவதால், அவரவர் இயல்புகளுடன் கலந்து, அதனுடன் எழுதி இயற்றப்பட்டவையும் சேர்ந்து சீக்கிரம் அரங்கேறுகின்றன. பொழுதுபோக்குக்கான சிறப்பாய் தெரிகின்றன.

சீரியல் என்னும் நெடுந்தொடரை விட இது சட்சட்டென்று, முடிவுகள் முகமாற்றங்களுடன் வெளிபடுவதால், மக்கள் அதை பார்ப்பதை விடுத்து, இதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் ஒருவகையில் நல்லதே. யாரை எப்படி விஷம் வைத்து கொல்வது என்று பத்து நாட்களாய் திட்டமிடுதல் குறைக்கப்படுகிறது.

இதிலிருக்கும் கதாபாத்திரங்கள் தங்களை மற்றும் தங்களைப் போன்றோரை ஒத்திருப்பதால் சுலபமாய் அந்த வீட்டிற்குள் இவர்களாலும் அவர்களுடன் வாழமுடிகிறது. தாங்கள் திரையில் பெரிதாய் உருவகப்படுத்தி பார்த்த யாரும் நம்மை விட மேம்பட்டவர்கள் இல்லையெனும் சமாதானமும் பிறக்கிறது.

தவறேதுமில்லைதான். இருந்தும், ஒரு பெரிய மனசிக்கல் உள்ள வாழ்க்கை முறையை நமக்கு இது காட்டுகிறது. உளரீதியான பிரச்சனைகள் சில மட்டுமே அலசப்பட்டு, அதுவும் கூட சரியான முறையில் தீர்வு எட்டப்படாமல் ஆங்காங்கே மூடப்பட்டு, செய்பவர்கள் வெளியேற்றப்பட்டு, கிட்டத்தட்ட கருவினுள் இருந்து காது கொடுத்து கேட்டும் முழுமையடையாமல், போர் வியூகத்தின் நடுவில் உயிர்துறந்த அபிமன்யுவை நினைவூட்டவும் அச்சமூட்டவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

#பிக்பாஸ்
#BigBoss
#Big_Boss


Comments

  1. ஒருவகையில் நல்லதே... ஆனால்...

    திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்..
    திருடும் கையைக் கட்டி வச்சாலும்...
    தேடும் காதைத் திருகி வச்சாலும்...
    ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்...

    மாறாதய்யா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்...
    தூய தங்கம் தீயில் வெந்தாலும்…

    மாறாதய்யா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...


    - கவிஞர் கண்ணதாசன்

    ReplyDelete
  2. இன்றைக்கு தமிழ் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது பிக்பாஸ்தான்.

    இது எதில் கொண்டு போய் விடுமோ...?

    - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந