Skip to main content

காதலே கவிதை - அம்ரிதா ப்ரிதம்

அம்ரிதா ப்ரிதம்
(1919 - 2005)




காதலை கடக்க நேர்ந்த எவரையும் அது விட்டுவைப்பதில்லை. அலைகழிக்க செய்து உவகை, அழுகை, ஆத்திரம், மௌனம், இறப்பு என்னும் கலவைகளுக்குள் உலர்த்தி எடுத்து அடங்குகிறது.

காதலைக் கொண்டாடும் கலாசாரங்களில் அதை தூய அன்பென்றும் காதலித்தவனையே கைப்பிடிப்பவள் பாக்கியசாலியென்றும் அதை இழந்தவர்கள் அபாக்கியவாதிகளாகவும் தன்னையே மாய்த்துக் கொள்பவர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறது. கலாசார காலகட்டங்கள் மாறிய காலத்தில் காதலும் பல அவதானிப்புகளுடன் பயணிக்கத் தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞர் அம்ரிதா ப்ரிதம் அவர்களின் வாழ்க்கையை சற்று காதலின்பால் நோக்க நேரம் கிடைத்தது. அவர் காலத்தில் வாழ்ந்த சக பெண்களை விட மிகுந்த தைரியமும் தன்னுயர்வும் கொண்டவர். சிறு வயதிலேயே தாயை இழந்து, திருமணமும் முடித்து வைக்கப்பட்டது. லாகூரில் வசித்து வந்தார். அவரின் இளம்வயது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை சந்தித்திருந்தது. அந்த காலகட்டத்தில் நடந்தவைகளை பஞ்சாபி மற்றும் இந்தியில் கவிதையாய் தொகுத்திருந்தார். அவை மிகவும் பிரபலமானவை. அவரின் கவிதைகள், நாவல்கள் போன்றவற்றிற்கு, Sahitya Akademi Award (1956), Jnanpith Award (1982), Padma Vibhushan (2004) கிடைக்கப்பெற்றன.

அவருக்கு காதலாய் ஸாஹிர் லூதியான்வி கிடைத்தபோது, அம்ரிதாவுக்கு ப்ரிதமுடன் திருமணம் ஆகியிருந்தது. அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வில் காதல் முதல் பார்வையிலேயே சிக்குண்டது.

அன்றிரவு மழையின் காரணமாய் அந்த கிராமத்திலேயே தங்க வேண்டிவந்தது. ஸாஹிருடன் இணைந்து நடந்த நினைவுகள் அவரின் கவிதை தொகுப்பில் இணைந்தன. அவரின் நிழலுடன் தான் நடந்ததை நினைவுகூர்கிறார் அவரின் சுயசரிதையில். இருவருக்கு இடையே ஆன இடைவெளி இரண்டு விஷயங்களால் மட்டுமே என்கிறார்.
‘There were two obstacles between us – one of silence, which remained forever. And the other was language. I wrote poetry in Punjabi, Sahir in Urdu.’

அவர்கள் இருவருக்குமான காதலில் மௌனம் அதிகமான சத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆழமான காதலின் வலிகளுடன் அம்ரிதா பயணித்தார். ப்ரிதமுடன் ஆன அவரின் மணவாழ்க்கை முதலிலிருந்தே சரிவர கட்டமைக்கப்படவில்லை. இரு குழந்தைகளுடன் பிரிதல் உறுதியாயிற்று.

ஸாஹிர் லூதியான்வியிடம் காதலுடன் கரம் பற்ற விரும்பிய அம்ரிதா அதிக காதல் கவிதைகளை எழுதியிருந்தார். நாவல் ஒன்றும் 'Aakhari Khat' அவர்களின் முதல் சந்திப்பை விவரித்தது. அவரின் ‘Sunehray’ (Messages) என்னும் கவிதை நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்தது.

அவர்கள் சந்தித்துக்கொண்ட இரவுகளில் லூதியான்வி குடித்த சிகரெட்களின் மிச்ச துண்டுகளை சேகரித்து வைத்து, அம்ரிதா தனிமையில் இருக்கும்போது புகைப்பதுண்டாம். அது லூதியான்வியை ஸ்பரிசத்தலுக்கு சமமானதாய் இருந்ததாக தன்னுடைய சுயசரிதையில் 'Raseedi Tikkat' ( Revenue Stamp) குறிப்பிட்டுள்ளார்.




அம்ரிதா ஸாஹிரின் மேல் வைத்திருந்த ஆழமான காதலும் அவரின் கை பிடித்து நடக்க விருப்பப்பட்டதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ஆனால் ஸாஹிரோ அவ்வாறு இல்லை. மிகுந்த மௌனம் சுமந்தவர். பிரிவினைக்கு பிறகு, பம்பாயில் குடியேறி அங்கு பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றினார். தான் அம்ரிதாவை காதலிப்பதாகவோ தனக்காகத்தான் அம்ரிதா காதலை கவிதையாக்குகிறாள் என்று சொன்னால் தன நண்பர்கள் சிரிப்பார்கள் என்று எண்ணியவர்.

இருவரும் சந்தித்தது மிக குறைவாக இருந்தாலும் காதல் கடிதங்கள் அதிகமாய் பரிமாறிக் கொள்ளபட்டிருந்தன. அம்ரிதாவைப் போல ஸாஹிர் இல்லை. அவரின் கவிதைகள் இடதுசாரி இலக்கியம் சார்ந்திருந்தது. காதல் இரண்டாம் பட்சமாய் இருந்தது.

அம்ரிதாவின் இத்தனை காதல் அழைப்புகளையும் அவர் இழந்த காரணம் அவரின் தாயின் மீதான மிகையான அன்பு எனக் கூறுகிறார் அம்ரிதா. சிறுவயதில் இருந்தே தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால், அவரால் இன்னொரு பெண்ணை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது.

பின்னாளில் சுதா என்னும் கவிஞருடனும் இன்னும் சில பெண்களுடன் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத ஸாஹிருக்கான உறவு காரணமாக அம்ரிதா சற்று விலகி இம்ரோ என்னும் ஓவியருடன் இறுதிவரை இணைந்திருந்தார்.

இதை கேள்விப்பட்ட ஸாஹிர் மனவருத்ததில் கவிதைகள் இயற்றியதாகவும் தெரிகிறது. அம்ரிதாவின் அளவு கடந்த காதலை ஏற்க இயலாத கோழைதனத்தை அவர் எழுதியிருந்தார்.

"Mehfil se uth jaane walo,
Tum logo par kya ilzam
Tum aabad gharo ke vasi
Main awaara aur badnaam."

(People who leave a happy gathering
What blame can I place on you?
You come from prosperous homes,
And I am infamous and delusional.)

காதலை காதலால் அணைக்கும் சாகசம் எல்லோருக்கும் அமைவதில்லை. இத்துனை அன்பு கொண்டிருந்த அம்ரிதாவின் காதலை ஏற்கமுடியாத கோழையாய் ஒரு கவிஞன், தன்னைத் தானே வருத்திக்கொண்டு இறந்திருக்கிறான். சரியான தருணத்தில் சொல்லமுடியாத செயல்படுத்தமுடியாத ஆண்களின் காதலால், பெண்கள் அதிகமாய் துன்புறுகின்றனர்.

அம்ரிதா ப்ரிதமின் எல்லையற்ற காதல் போல் இந்த உலகில் அனேகர் வாழ்வில் நிகழ்வதுண்டு. தன்னைவிட அதிகமாய் நேசிப்பவரை காதலித்திருக்கிறார்கள். மனதில் வலியையும் அதனால் ஒரு சுகத்தையும் கொடுக்கவல்ல சக்தி இம்மாதிரியான காதலுக்கே மட்டுமே உண்டு.

காதலில் தோன்றும் கனவுகளும், சந்திப்புகளின் சமயம் விட்டுச்செல்லும் தடயங்களும் எங்கும் மறைவதில்லை. அம்ரிதாவின் கண்ணீர் கலந்த உறங்கா இரவுகளைப் போல இங்கு தைரியமற்ற ஆண்களின் மௌனங்களால் எத்தனையோ பெண்களின் உடைந்த இதயங்கள் உறங்காமல் அழுதுக்கொண்டுதான் இருக்கின்றன.

காதலின் சக்தி இணைக்கும் இரு இதயங்களை உயிருடன் கொல்லும் ஆற்றல் பெற்றது. அம்ரிதா ப்ரிதம் - ஸாஹிர் லூதியான்வி காதலும் அதில் ஒரு சான்றாய் எழும்பி நிற்கின்றது.


"Rall gai si es vich ik boond tere ishq diEsse layi 
main zindagi di saari kudattan pee layi"

Just because a drop of your love had blended in

I drank down the entire bitterness of life.

                                                   ~ Amrita Pritam










Comments

  1. அருமையான தகவலை
    அழகாகத் தொகுத்து
    உள்ளத்தைத் தொட வைத்த
    பதிவிது!

    ReplyDelete
  2. ...அம்ரிதா ப்ரீதம் இந்தியாவின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய வாழ்வு இவ்வளவு சோகமானதா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அதுவும் அவரின் வெற்றியின் ரகசியமாகவும் இருக்கலாம்.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந