Skip to main content

படிப்பும் ஒழுக்கமும்..




எங்கே போனாலும் நம்ம கண்ணுலேயே எல்லாம் படுது..எக்ஸாம் எழுத போன இடத்துல கூட..

எக்ஸாம் ரூமுக்கு முன்னாடி, கும்பலா கொஞ்ச பேர், தனியா தனியா கொஞ்ச பேர் இப்படி எல்லாம் உட்காந்து படிச்சுகிட்டு இருப்பாங்க. பார்த்திருப்பீங்க.

அப்படி ஒரு கும்பல இரண்டு நாளா எக்ஸாம் ஹால்ல பார்த்துகிட்டு இருக்கேன்.

ஒரு ஆளு, ஆறு ஏழு பொம்பளங்க அல்லது பொம்பள பிள்ளைங்க (கல்யாணம் ஆனவங்களும் ஆகாதவங்களும்) வட்டம் கட்டி உட்கார்ந்து படிக்கிறாங்களோ இல்லையோ அரட்டை..

எல்லார்கிட்டேயும் உரசிகிட்டும் சிரிச்சுகிட்டும் பேசிகிட்டு இருந்தார் அந்த ஆளு. அவளுங்களும் அப்படிதான். வீட்டை விட்டு வெளியே வந்தா, வீட்டுக்காரரை மறந்துருவாங்க போல..

அதுல ஒரு பொம்பளை மட்டும் சிரிக்காம கொஞ்சம் உம்முனு இருந்தாங்க. அவங்க நடந்துகிறதுல இருந்தே தெரிந்தது, அவங்க அந்த ஆளோட மனைவின்னு. ரெண்டு பேரும் பரிட்சை எழுத வந்திருக்காங்க போல.

மூணாவது நாளும் இப்படி கெக்கெபெக்கென்னு சிரிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு invigilator கட்டு பேப்பரோட வந்தாங்க. என்ன கடுப்பில இருந்தாங்களோ தெரியல, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.

'இது என்ன பீச்சா..காத்து வாங்கவா வந்துருக்கீங்க? இரண்டு நாளா பார்த்துகிட்டுதான் இருக்கேன், படிக்கிற இலட்சணமே இல்லையே. எக்ஸாம் எழுத வந்த மாதிரியே தெரியலையே. இது காலேஜ். ரூம் போட்டு செய்ற வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்கன்னு' ஒரு மிரட்டு மிரட்ட, அப்படியே அவனும் அவன்கூட கடலை போட்டுகிட்டு இருந்தவளுங்களும் கப்சிப்..


எனக்கு மட்டுமல்ல இதை கவனிச்சுக்கிட்டு இருந்த மத்தவங்களுக்கும் சந்தோஷமா இருந்தது. படிக்கும் போது படிப்பை மட்டும் பார்க்கனும். பொறுக்கிதனம் பண்ணக்கூடாது. அது படிப்புக்கு செய்ற துரோகம்னு ஏன் இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது?

Invigilator சத்தம் போட்டதிலிருந்து ஒன்னு மட்டும் புரியுது, படிப்பின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் நம் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிதாய் குலையவில்லை என்பது. Correspondence exams தானே, நமக்கென்னன்னு இருக்காமல், படிக்கிற இடத்துல ஒழுக்கத்தை முதன்மைபடுத்தியதற்கு ஒரு சபாஷ் சொல்லணும் அவங்களுக்கு.

அவன் மனைவி முகத்தைப் பார்த்தேன். அப்படி ஒரு புன்முறுவல்....இல்லைங்க, இதுக்கு பேர்தான் பொன்முறுவல்... 


Comments

  1. சிந்திக்க வைக்கும் பதிவு
    படிப்புக்கும் ஒழுக்கத்திற்குமான
    பிணைப்பு குறைந்து கொண்டுதான் உள்ளது
    பகிர்ந்த விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete
  2. படிப்பும் ஒழுக்கமும்..- அருமை. சரியான கருத்துகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila Puhal

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அய்யா..

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி