Saturday, 16 May 2015

மௌனங்கள் இல்லை..

மழையிடம்..



மழையிடம் மௌனங்கள் இல்லை 
தொடும் மேகங்களுடனும் 
வெள்ளை பூக்களுடனும் 
பேசியபடியே கடக்கின்றது  

மலர்களைப் போல் 
மிதவைகள் கூட மழைக்கானவைதான் 

மழையின் கரம் பற்றி 
கதை சொல்கின்றன 
தத்தளித்து தவிக்கின்றன  
புதுக்கவிதைக்காரனைப் போல் 

மிச்சங்களுடன் வாழும் 
இந்த மிதவைகளிடமும் 
மழையைப் போல் மௌனங்கள் இல்லை
  

8 comments:

  1. அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. மழை அடித்துச் செல்லும் மிதவையின் போக்கில்

    சொற்கள் பெய்து உங்களின் கவிதை

    அருமை சகோ.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  3. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ரூபன்

      Delete
  4. நன்றி தனபாலன்

    ReplyDelete
  5. //தத்தளித்து தவிக்கின்றன
    புதுக்கவிதைக்காரனைப் போல் //

    :) நல்ல உதாரணம். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....