Skip to main content

வலைப்பதிவர்களாய் பெண்களாகிய நாங்கள்...

வலையுலகில் கோவை பெண்கள்...





இன்றைய தி ஹிந்து நாளிதழில், மெட்ரோ பிளஸில் வலைப்பதிவு உலகில் என் முயற்சி பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. என் தோழி எழிலும் (http://nigalkalam.blogspot.in/) இதில் உண்டு என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

படித்துப் பார்க்கவும் :
http://www.thehindu.com/sci-tech/technology/internet/blog-by-blog/article5709804.ece




சிறுவயதில் இருந்தே பக்கம் பக்கமாக டைரி எழுதுவது வழக்கம். ஒரு நாளின் பதிவுகளை அந்த பக்கம் நிறைத்து அடுத்த தேதியின் பக்கத்தில் ஒரு கட்டம் போட்டு எழுதுவேன். எழுதும் அந்த பழக்கம்தான், இன்று என்னை வலைப்பதிவு (Blog) உலகில் நிமிர்ந்து நிற்க உதவியது.

2004 யில் ஆரம்பித்த இந்த வலைபதிவு எழுத்துகள் என் காகித கணக்கை சற்று குறைத்துவிட்டது என்னமோ நிஜம்தான். எனினும் நான் மட்டுமே படித்துவந்த என் எண்ணங்களை இன்று அனைவரும் படித்து ரசிக்க வைத்து, என்னை மேலும் மேலும் எழுத தூண்டியது இந்த வலைபதிவு உலகம்தான்.

இதை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நீங்களும் உங்களின் எண்ணங்களை எழுத்துகளாக்கி அனைவரும் படிக்க உதவலாம். உங்களின் பயண அனுபவங்கள், சமையலின் வாசம், குழந்தைகளை வளர்ப்பது என்று எத்தனையோ அனுபவங்களை எழுதிச் செல்லலாம். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் மட்டுமல்லாமல் ஓய்வை ஏற்படுத்தி கூட வலையில் உங்களை பதிக்கலாம்.

அங்கு எழுதும்போது உடனுக்குடன் இங்கு போல் பதில் வராதுதான், ஆனால் வாக்குவாதங்களும் சண்டைகளும் ஒருவரை ஒருவர் தூற்றுவதும் விலக்குவதும் அங்கு கிடையாது. என்றும் உங்கள் தளத்தில் நிலைத்து இருக்கும் உங்களின் எழுத்துக்கள் உலகத்தின் இருக்கும் உங்களின் நட்பில் இல்லாதவர்களைக் கூட படிக்க வைக்கும்.

வலைபதிவு தொடங்கி உங்களின் எழுத்துக்களையும் பதியுங்கள்...
www.blogger.com

Comments

  1. வாழ்த்துக்கள் மேடம்ஸ்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்...

      Delete
  4. வாழ்த்துக்கள்! இணைப்பிற்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படித்து பாருங்கள்...நன்றி சுரேஷ்...

      Delete
  5. வணக்கம் !
    வாழ்த்துக்கள் சொந்தங்களே உயிராம் தாய் மொழி தினமான
    இந்நாளில் தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன் !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி...

      Delete
  6. வாழ்த்துக்கள் அகிலாஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் நன்றி நண்பா...

      Delete
  7. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அய்யா...

      Delete
  8. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  9. சுடச் சுட செய்தி வந்திருக்கிறது....உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி