Skip to main content

என் கவிதை நூல் ‘சொல்லிவிட்டு செல்’ வெளியீட்டு விழா...


நூல் வெளியீட்டு விழா 


பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 2013) படைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாகவும் கூடியிருந்த பெரிய அரங்கில் என்னுடைய இரண்டாவது நூல் ‘சொல்லிவிட்டுச் செல்’ வெளியீடு சிறப்பான முறையில் நடைபெற்றது. 

வந்திருந்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றி.


விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தகிதா அறக்கட்டளை. இது அவர்களின் நான்காம் ஆண்டு வெளியீடு. சுமார் 60 நூல்கள் இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள். 

கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களின் ‘சுவடுகள் நெய்த பாதை’ நூலும் இந்த விழாவில் வெளியிடப்பட்டு சிறப்புரையும் ஆற்றினார். மற்றும் கவிஞர் பீர் ஒலியின் ‘சிறகுகளின் சுவாசங்கள்’, கவிஞர் கடங்கநேரியானின் ‘நிராகரிப்பின் நதியில்’, கவிஞர் தியாகுவின் ‘நீயும் நானும்’, கவிஞர் சிலம்பரசனின் ‘காதலாகி போனேன்’, கவிஞர் மௌனிகாவின் ‘கவிதை பொழியும் தூரிகை’ நூல்களும் வெளியிடப்பட்டது.


தகிதா பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் போ. மணிவண்ணன் அவர்களின் ‘பனி சுமந்த மேகங்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலும் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் மணிவண்ணன் அவர்கள் சிறப்பான முறையில் திறனாய்வு செய்தார். 




இந்த விழாவில், தகிதாவின் நிறுவனர் போஜன் அவர்களின் தலைமையில், தள்ளாத வயதிலும் இந்த விழாவை சிறப்பு செய்தார் சர்வதேச தமிழ் சிற்றிதழ்கள் சங்க தலைவர் திரு பூ, ஆ. ரவீந்திரன் அவர்கள்.



சொல்லிவிட்டுச் செல் 




என் முதல் கவிதை தொகுப்பு 'சின்ன சின்ன சிதறல்கள்' என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இது என் இரண்டாவது கவிதை தொகுப்பு. இதன் தலைப்பு ‘சொல்லிவிட்டுச் செல்’ என்பது. இந்த தலைப்பு கேட்டவர்கள் உடனே என்னிடம் கேட்ட கேள்வி ‘என்ன வழக்கமான காதல் கவிதைகளா? என்பதே.

ஆமாம்...காதல் கவிதைகள் தான்...ஆனால் வழக்கமானது இல்லை என்பதே என் பதில்...

ஏனென்றால், என்னால் என் கண் முன் விரிந்த வானத்தை, அதன் விசாலமான நீலத்தை, அதில் மிதக்கும் நிலவை, முகிலினங்களை, பறவைகளை, தூறலாய் விழும் மழைத்துளியை காதலிக்க முடியும்.  அதில் நனைந்ததுதான் இந்த கவிதை தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள்...

நூலின் அணிந்துரைக்காக கோவை ஞானி அய்யா அவர்களிடம் சென்றிருந்தேன். அவருக்கு பார்வை இல்லாததால் அனைத்து கவிதைகளையும் நானே வாசித்துக் காண்பிக்க வேண்டியதாயிற்று. உள்வாங்கிக் கொண்டே இருந்தார். 

அவரின் கருத்தாய், 'இன்று என்னால் பார்க்க முடியாத இயற்கையைக் கவிதை மூலமாய் காட்சிப்படுத்திவிட்டாய். பெண் கவிஞர்கள் மத்தியில் இயற்கையைப் பெரிதாய் கவிதையாக்குவது உன்னால் முடிந்திருக்கிறது' என்று பாராட்டினார். அவரின் பாராட்டை மிக பெரிய விருதாய் நான் நினைக்கிறேன்.

இந்த தொகுப்பில் இயற்கை கவிதைகள் மட்டுமல்லாது இயல்பாய் கண் முன் காண்பவைகளையும் கவிதையாக்கி இருக்கிறேன். காதலை கூட நளினமாய் ஒரு பெண்ணின் பார்வையில் தொட்டுச் சென்றிருக்கிறேன். 
  
படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை விமரிசனங்களை என் முன் வைக்கலாம். அது என்னை மேலும் எழுதும் முயற்சிக்கு உதவும். 

நூல் கிடைக்கும் இடம்  

நூல் வேண்டுவோர் artahila@gmail.com க்கு எழுதினால், அனுப்பி வைக்கப்படும். 







Comments

  1. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  3. நல்ல விஷயம் வாழ்த்துக்கள் சென்னையில் உங்கள் பதிப்புகளை பெற்றுக்கொள்கிறோம்..நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜன்...
      கிடைக்குமிடம் சென்னை புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் புதுப்புனல் (அகநாழிகை) ஸ்டாலில் கிடைக்கும்...

      Delete
  4. மிக்க மகிழ்ச்சி
    20 21ல் கோவை தமிழ் பண்பாட்டு மைய விழாவில்
    கலந்து கொள்ளும் உத்தேசமிருக்கிறது
    முடிந்தால் நூலை நேரடியாகப் பெற்றுக் கொள்கிறேன்
    இல்லையேல் சென்னை செல்கையில் வாங்கிப் படித்து
    கருத்தைப் பதிவு செய்கிறேன்

    சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...கோவை வரும்போது சொல்லுங்கள்...நூலை தருகிறேன்...

      Delete
  5. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.....அகிலாவின் கவிதைகள்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந