Skip to main content

ஹலோ...ராங் நம்பர்....



கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர் காமிக்கிற டிஸ்ப்ளே வேற வேலை செய்யலை. எனக்கு பொறுமை கொஞ்சம் அதிகம். அதனாலே பொறுப்பா அமைதியா பதில் சொல்லிகிட்டு இருந்தேன். 

அதுல ஒரு பெண்மணி அடிக்கடி கூப்பிட்டுகிட்டு இருந்தார். முதல்ல நாலைந்து தடவை ராமச்சந்திர அண்ணா இருக்காங்களா என்று தெலுங்கு வாடையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் சும்மா கேட்கமாட்டார். ரொம்ப பப்பிலி குரலில் பேசுவார். ரொம்ப எரிச்சல் வந்தாலும் அந்த குரலில் உள்ள சந்தோஷம் நம் BP யை கொஞ்சம் குறைத்துவிடும். 

அப்படி ஒரு அண்ணா இல்லை என்று சொல்லி சலித்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு சத்தமில்லை. நானும் கூட சரியான நம்பரை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அந்த பெண்மணியின் குரல். இந்த முறை அண்ணாவை தேடவில்லை. அதற்கு பதிலாக மீனா தானே என்று ஆரம்பித்து தெலுங்கில் ஏதோ சொன்னார். 


எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'போன் பண்ணினா வேற நம்பர் போகுது'  என்று அவர் சொல்வது புரிந்தது. (நாங்களும் நிறைய டப்பு படம் பார்ப்போம்ல...).  நானும் தமிழில், 'இது பழைய அதே ராங் நம்பர் தாங்க பேசுறேன்...நான் மீனா இல்லை...'  என்றேன். நோந்துவிட்டார். தனக்கு தெரிந்த தமிழில் 'மன்னிச்சுக்கோங்கோ' என்று சொல்லிட்டு வச்சிட்டார். அப்பாடா ஒரு வழியா புரிஞ்சிகிட்டாரே என்று என் வேலையை பார்க்க கிளம்பிட்டேன்.



இன்று மறுபடியும் போன்... எடுத்தவுடன் ஹலோ என்ற குரல் கேட்டதும் அட நம்ம ராங் நம்பர் தோழிதான் என்று சந்தோஷம் வந்துவிட்டது. சொல்லுங்க என்றேன்....அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் நம்பர் எப்படி மாறிச்சுன்னே தெரியல...அப்படி இப்படி என்று ஆங்கிலமும் தெலுங்குமாக கதை சொல்லிகிட்டு இருந்தார்.....

'எதுக்கும் உங்க நம்பர் சொல்லுங்க', என்று கேட்டேன். ஏன்னு கேட்கவேயில்ல. கொடுத்துட்டார்...உங்க நம்பர் என்கிட்டே இருக்குன்னு சொல்லிட்டு பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. 

ராங் நம்பர் மூலம் ஆந்திராவில் இருந்து ஒரு தோழி கிடைத்தாயிற்று. (இருக்கிற பிரெண்டு எல்லாம் போதாதா என்று பேக்கிரௌண்டு சத்தம்...வேற எங்கிருந்து...என் வீட்டுக்குள்ளே  இருந்துதான் ). 

இனி நம்ம வழக்கமான பிளேடை அங்கேயும் போடலாம். மொழி தெரியாட்டி கூட நாங்க ஒரு மணி நேரம் பேசுவோம்ல...

நாங்க யாரு...பெண்களாயிற்றே.... 







Comments

  1. BP யை கொஞ்சம் குறைக்கும் பப்பிலி சகோதரிக்கு வாழ்த்துக்கள்... எதற்கும் இணைய சகோதரி "பெண் என்னும் புதுமை"யை விசாரிக்கவும்... அப்பாடா...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கும் வந்திருக்கலாம் என்று சொல்ல வந்தேன்... ஹா... ஹா...

      Delete
    2. அது சரி

      க்கும் அதான் சரி

      Delete
    3. எங்களை வம்புக்கு இழுக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சா...ஹாஹா...என்ஜாய்...

      Delete
  2. ராங் கால் நன்மையை (BP குறைவு ) கொடுத்தால் நல்லதே

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...அவங்க பேசுவாங்கன்னு எதிர்ப்பார்க்கிற மாதிரி வச்சிட்டாங்க..

      Delete
  3. முகம் பாராதும் மொழியறியாதும்
    யாரெனத் தெரியாதும் விடாது தொடர்ந்து
    பேசத் தெரியாவிட்டால் எப்படி நாமெல்லாம்
    சிறந்த எழுத்தாளராய் ஜொலிக்கமுடியும்
    சொல்லிச் சென்ற விதம் வெகு வெகு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் நடை இவ்வளவுதான் ஐயா....அதையே பாராட்டிட்டீங்க...நன்றி உங்களுக்கு...

      Delete
  4. ராங் கால் Bp யை குறைக்கும்... மணிக்கணக்கா கதைக்கலாம்...எதிர் முனைக்குதானே பில் ஆகப்போவுது... ஹா.. ஹா..!

    ReplyDelete
    Replies
    1. உஷா...இது நல்ல option ப்பா....நன்றி ஐடியாவுக்கு..

      Delete
  5. ராங் நம்பர் மூலம் ஆந்திராவில் இருந்து ஒரு தோழி கிடைத்தாயிற்று.

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...ராஜேஸ்வரி நாம் நேரில் பார்க்கும் போது அவங்களை உங்களுக்கும் தோழியாக்கிவிடுகிறேன்...நன்றி...

      Delete
  6. எனக்கு bp குறைக்கிற மாதிரி ராங் no வராது ஏத்தி விடுற மாதிரி தான் வரும்

    ReplyDelete
  7. உங்களுக்கு தோழி கிடைதாயிற்று ஆனா பில் ...கட்டும்போது ...சரியான கால் சார்ஜ்யே பார்க்கும் போது தலை சுற்றும் ராங் கால் சார்ஜ் மயக்கம் வராம இருந்தா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. அது என் வீட்டுக்காரருக்கு இல்ல வரணும்....

      Delete
    2. Happy friending on wrong calling. In life too wrong calls from nowhere lead us to somewhere we know not where. Happy landing Ahil.

      Delete
    3. u r right...but this is a right number from a wrong call....thankx pa...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...