Skip to main content

எஞ்சியது ஒன்றுமில்லாமல்...




வெற்றிடம் நோக்கியதாய் அமைந்தேவிட்டது
அந்த கூண்டின் அடையாளம்... 

ஒட்டையிட்ட சிறு பானைகளும் 
நட்டுவைத்த மரக்கிளைகளும் 
தட்டும் சில கிண்ணங்களுமாய் 
பறவைகளற்றுப் போயிருந்தது...

காதல் சிட்டுக்களையும் 
அதன் கீச்சுக்களையும் 
கொஞ்சும் கிளிகளையும் 
சிறு குஞ்சுகளையும் 
அடை காத்திருந்திருக்கிறது
வருடங்களாய்...

எஞ்சியது ஒன்றுமில்லாமல் 
மிச்சமாய் இருக்கும் கம்பிகளுடன்  
இவ்வமயம் தனித்தே நிற்கிறது...

தன்னருகே வந்தமரும் சிறகுகளை 
ஆசைக்கொண்டு அழைத்துப் பார்த்தது
அதன் சட்டமிட்ட கம்பிகளே  
அதற்கு சுமையாகிப் போனதை உணராமல்,
இன்னமுமாய் 
காக்கைகளிடம் பேசிக்கொண்டே 
கதவு திறக்கக் காத்திருக்கிறது... 


Comments

  1. தன்னருகே வந்தமரும் சிறகுகளை
    ஆசைக்கொண்டு அழைத்துப் பார்த்தது
    அதன் சட்டமிட்ட கம்பிகளே
    அதற்கு சுமையாகிப் போனதை உணராமல்,
    இன்னமுமாய்
    காக்கைகளிடம் பேசிக்கொண்டே
    கதவு திறக்கக் காத்திருக்கிறது...
    கற்பனை நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. எங்கே போயின பறவைகள்? இறந்தனவா? கூட்டைத் துறந்து பறந்தனவா? பறந்துபோயின என்றால், எப்போதோ சிலகாலம் அடைக்கலம் தந்திருந்த கூண்டருகில் வந்து சற்றே குசலம் விசாரித்துப்போகலாம் ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கும் அப்பறவைகள். அழகான கவிதை. பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. ஊர் மாற்றிப் போகும் போது அதில் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் பறக்க விடுவதும் மறுபடியும் வாங்கி வளர்ப்பதுவுமாக இருந்தேன். இப்போது வெறுமையாய் இருக்கிறது அந்த கூண்டு...
      நன்றி கீதமஞ்சரி...

      Delete
  3. அருமை சகோ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  5. புல்லினத்திற்கு
    புதிதாய்
    புனையப்பட்ட
    அழகிய கவிதை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்...

      Delete
  6. மரங்களை வெட்டுவதன் மூலம் இம்மாதிரியான பறவைகளும் அழிந்துவருகின்றன... நல்ல கவிதை.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. எஞ்சியது ஒன்றுமில்லாமல்.இல்லை அதன் நினைவுகள் எஞ்சி இருக்கின்றனவே

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜன்...

      Delete
  8. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அழகு அழகு......பறவைகளுக்காய் ஓர் அழகு கவி!!!அருமை சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றுதான் பறவைகளும்...நன்றி...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி