Skip to main content

உடைந்த மௌனத்தின் கற்சுவர்...


இருட்டை மையப்படுத்திய இரவின் நாக்கு ஓன்று
விம்மிக் கொண்டே கல்லறையின் கற்சுவரை உடைத்தெறிந்தது...
  
கடைசியாய் மிச்சமிருந்த மல்லிகையின் வாசத்தை அணிந்துக் கொண்டு
அவனின் மௌனத்தின் வாசம் தேடி அலைந்தது...

பந்தலிட்ட அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று  
உச்சஸ்தாயில் பெயரிட்டு உரக்கக் கத்தியது....
ஜன்னலின் இடுக்குகளில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றின...
உள்ளிருந்த அந்த மௌனத்தின் பிம்பம்  
அவனின் இருப்பை உறுதிப்படுத்தியது...

உயிரின் வெறி அதனுள் தீப்பந்தமாய்
உள் நுழைந்து அவனின் மௌனம் உடைத்து வெளியேறியது
பெருத்த குரலெடுத்து அவன் ஓலமிட

சாத்வீகமாய் திரும்பியது கற்சுவருக்குள்...



Comments

  1. "போய்" சேர்ந்து விட்டானா...?

    ReplyDelete
    Replies
    1. அவன் மௌனம் மட்டுமே போய் சேர்ந்தது...:)

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. அவனும் அவளுடன் கலந்துவிட்டானா?

    ReplyDelete
    Replies
    1. அவளை காயப்படுத்திய அவனின் மௌனம் மட்டுமே உடைத்து எறியப்பட்டது அவளால்...

      Delete
  4. புரியுது ..ஆனா புரியல ..இருந்தாலும் கோனார் கைடு ப்ளீஸ் ..ம்ம்ம்..பள்ளிகூடத்தில தான் தமிழ் இலக்கியங்களுக்கு கைடு உதவி தேவை பட்டது இங்கேயுமா ..

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்த மௌனங்கள் எல்லாமே அர்த்தம் பொதிந்தவையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவை அருகில் இருப்பவர்களை, உயிராய் நேசிப்பவர்களை கொன்றேவிடும் சில சமயங்களில்....
      அவ்வாறு மனம் மரித்து போன ஒரு பெண்ணின் பிம்பம் அவனின் மௌனத்தை மட்டும் அவனிடமிருந்து பறிப்பதாக ஒரு கற்பனை கவிதை தான் ராஜன் இது....

      Delete
  5. வணக்கம் !
    வாழ்த்துக்கள் தோழி .வலைச்சரத்தில் இன்று தங்களை அறிமுகம்
    செய்துள்ளனர் .மிகவும் ரசித்தேன் .தங்களின் எழுத்துக்கள் என்
    மனதையும் கவர்ந்ததனால் தங்களைப் பின் தொடர்வதிலும் பெருமை
    கொள்கின்றேன் .வாழ்க தங்களின் தமிழ் பணி .

    http://blogintamil.blogspot.ch/2013/07/tamil-poets-in-blogs.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...நானும் பார்த்தேன்...மகிழ்ச்சியே என் சிறு எழுத்துக்களையும் தாங்கள் படிப்பது ...நன்றி...

      Delete
  6. அன்பின் அகிலா - 19.08.2013 வலைச்சரப் பதிவில் தங்களது சுய அறிமுகப் பதிவின் மூலமாக இங்கு வந்தேன் - கவிதை அருமை - வாசகணுக்குக் சற்றே சிரமம் புரிந்து கொள்வது. இங்கு ராஜனின் மறுமொழிக்குத் தங்களின் மறுமொழி படித்தேன். இப்பொழுது கவிதை புரிகிறது. கவிதை நன்று - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. புரிதல் சற்று சிரமம் தான்...நன்றி சீனா...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந