Skip to main content

விடியலின் வாசிப்பு....




உன் மௌனத்தின் வாசிப்பு தருணங்கள் அதிகமாகவே படுகிறது எனக்கு...  
நெருக்கங்களை இழந்த அந்த நிமிடங்களில்
உயிர் மட்டுமே சஞ்சரிக்கிறது கனவுகளின் மிச்சங்களில்...

நிஜங்களில் பேசப்படாத அந்த அன்பு
நினைவுகளில் பின்தங்கப்படும் சாத்தியக்கூறுகளை  அதிகமாய் சுமக்கிறது...  

உடன்படாத மனம் விலகச் சொல்கிறது
உடன்பட்டு போன உணர்வோ மறுக்கிறது வாதத்தை...

நிலவின் நேரங்களில் கண் முழித்து
அதில் என் தேரோட்டியை தேடும் போது
துருவமாய் தோன்றி மறைகிறான் அதிகாலையில்...

விடியலின் போது தோன்றும் கனவுகள்
வெளிச்சத்தை காட்டவில்லை....
முடித்துக் கொள்ளலாம் கனவுகளை
இல்லையென்றால் மௌனங்களை
இனிவரும் விடியலாவது வெளிச்சமாகட்டும்....





Comments

  1. /// நிஜங்களில் பேசப்படாத அந்த அன்பு..
    நினைவுகளில் பின்தங்கப்படும் சாத்தியக்கூறுகளை அதிகமாய் சுமக்கிறது... ///

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  2. நேராக படிப்பவர்களின் உணர்வைத் தொடும்
    ஆழமான கவிதை
    தொர்ந்து கவிதைகளில் உச்சம் தொட
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எழுதபாடாத சிந்தனைகள் நினைவுகளின் வலியா இல்லை கனவுகளின் கலையாத மௌனங்களா எதுவாயினும் உணர்வு பூர்வமான வரிகள் ..நன்றாக இருக்கிறது சில வரிகள் எதார்த்த எண்ண ஓட்டங்களை நாடி பிடித்து பார்ப்பதால் மனதில் ஒரு புரியாத வலியும் வருகிறது சூப்பர்

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி நண்பா....உங்களின் கவிதை படித்தேன்.. அருமை...

      Delete
  5. ஆகட்டும் ஆகட்டும்
    என்றாவது ஒருநாள் அகப்படட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....அதுக்கும் கவிதை எழுதுவோம்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் 2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில் கொடுத்துள்ளார். அவற்றுள் எனது நாவலான தவ்வை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகிழ்வும் அன்பும் 🙏 லிங்க் 👇 தவ்வை