புத்தனின் வழி....





அனுபவங்கள் ஆச்சிரியப்படுத்தும்
தவறுகள் திருந்தச்சொல்லும்

செயலில் தன்மையாய் சுடுசொற்கள் தவிர்த்து
சந்தேகம் களைந்து சுற்றத்தை காயப்படுத்தாமல் 
அகந்தை அழித்து அறிவையும் விடுத்து
வலிகளை பொதுவில் வைத்து மனிதத்தை மதித்து
சாதாரணமாய் வாழும் அனுபவமே புத்தம்...

அந்த அனுபவத்தையே செயலாக்கி
நினைப்பில் முரண்படாமல் நின்று
புத்தனின் வழி கால்பதித்து
நடை பயில விழைகிறேன்....


Comments

  1. சுற்றத்தை காயப்படுத்தாமல்
    அகந்தை அழித்து அறிவையும் விடுத்து
    வலிகளை பொதுவில் வைத்து மனிதத்தை மதித்து//
    மனிதம் இருந்தால் மட்ட்ரதேல்லாம் தேவையில்லை

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்...மனிதத்துள் எல்லாமே அடக்கம்தான். நன்றி கண்ணதாசன்...

      Delete
  2. புத்தனின் வழி வந்த பித்தர்கள் எல்லாம் சித்தார்த்தனை மறந்தவர்கள்தான் ஆசை என்பதை விடவேண்டும் என்பதே 24 வது புத்தனாக பதவி ஏற்று கொண்ட சிதர்தர்தனின் ஆசையாக இருந்தது ..அதன் முன் பல புத்தர்கள் இருந்திருகிறார்கள் ..ஹீனயானம் மகாயானம் என்று அவர்களுக்குள்ளேயே சில கருத்து மாறுபாடுகள் உண்டு ஆகையால் மாறும் சில உலக மாற்றங்களின் போக்கினை சமாளிக்க புத்தனாக வேண்டிய அவசியமில்லை..அதை எதிர்கொள்ளும் மனது ஒன்று மட்டுமே போதும் ....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....