Skip to main content

உன்னிலிருந்து நான்....


வேறுபட்டபோது....

one sided love


உன் கண்கள் என்னை தேடும் போது
நான் எனக்குள்ளே தேடிக் கொண்டிருந்தேன்
என் தேவை என்ன என்று
அது நீ இல்லை என்று தெரிந்த போது
நீ எனக்குள் இல்லை – ஆனால்
நான் மட்டும் உனக்குள் இன்னும்...

தினம் உன் உருகுதலில்
நான் நனையவில்லை
உன் பார்வையில்
என் பார்வை பதிக்க
உனக்கு கண்ணாடி வேண்டாம்
உன்னை விரும்பாத என் மனம் போதும்...

உன்னை வெறுக்க முடியாமல்
வெறுக்கவும் விலகவும் விரும்பினேன்
ஆனாலும் நீ என் தெருகோடியில்....

நீ என்னுள் நுழைய
என் மனகதவின் திறவுகோல் என்னிடம் இல்லை
தொலைத்தேன் என் மனதுடன்
அதையும் என் விருப்பத்துடன்....

அனுமதி மறுக்கப்பட்ட நீ
எமனிடம் போனாலும் உன்னை மீட்க
நான் உன் சாவித்திரியும் இல்லை...

விளையாட நினைக்கவில்லை உன் வாழ்வில் நான்
விளையாட வராதே என் வாழ்வில் நீயும்
என்றாவது நீ என்னை உணர்ந்தால்
அன்று பெண்ணின் மனது ஒரு புதிராகி போகும் உனக்கு
உன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
இன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே....



Comments

  1. அருமையாக இருக்கிறது........

    புது முகப்புக்கும் மாறிவிட்டீர்கள் போல...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், புதுமுகப்பு பார்வையிட எளிதாக இருக்கிறது...நன்றி....

      Delete
  2. அருமையாக சொன்னீர்கள்

    //விளையாட நினைக்கவில்லை உன் வாழ்வில் நான்
    விளையாட வராதே என் வாழ்வில் நீயும்
    என்றாவது நீ என்னை உணர்ந்தால்
    அன்று பெண்ணின் மனது ஒரு புதிராகி போகும் உனக்கு
    உன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
    இன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே//

    அற்புதமான வரிகள்

    ReplyDelete
  3. உங்களின் (வலைபூ)முகப்பு பளிச்சுன்னு அழகா இருக்குங்க

    ReplyDelete
    Replies
    1. dynamic view நல்லாத்தான் இருக்கிறது....

      Delete
  4. நட்பு காதல் இவற்றின் பரினமத்தின் சிதறல்கள் .............அருமை ஒருதலை ..........காதல்

    ReplyDelete
    Replies
    1. மனம் வேறுபடும் போது நட்பை நட்பாகவே பார்ப்பது நல்லது...நன்றி சரளா...

      Delete
  5. அருமையான கவிதை.!

    ReplyDelete
  6. உன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
    இன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே....

    உணர்வுகளை வெளிப்படுத்திய வரிகள் அருமை.

    ReplyDelete
  7. உணர்வு வெளிப்படுத்தல் அருமை சொந்தமே...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிசயா....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி