Skip to main content

தகப்பன் சாமி....

தகப்பன்தான் சாமி.....



காலையில் எழுந்ததும் மடங்கிய கை கால்களை நிமிர்த்த முடியாமல் வலி 
சன்னலின் வழி எப்போதும் ஒரே சம்மணத்தில் இல்லத்தின் வாயிலில் பிள்ளையார்


'வாங்க காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்' என்று மனைவி
மூர்த்தியின் காப்பியுடனும் ஹிந்து பேப்பருடனும் முன் வாசல் நாற்காலியில்...

'என் article பேபரில் வந்திருக்கு..., படிங்க....' என்று போகிற போக்கில் கோபாலய்யர்
'வாக்கிங் வரலையா?....' என்று பாஸ்கரன் 
'மனசு சரியில்லை...'பொத்தம் பொதுவான என் பதில்
'மகன் நினைப்பா....' இது பத்மாவதி அம்மாள்


இந்த கேள்விகளுக்கு பிறகுதான் உள்ளே அழுத்திய மகனின் நினைப்பு வெளி வந்தது
'இந்தியாவுக்கே திரும்புவதில்லை' என்ற மருமகளின் தீர்மானமும் நிழலாடியது 
பசங்க அங்க பழகிட்டாங்க, படிப்பு இங்க சரியில்ல...என்ற மாதிரியான ஓட்டை காரணங்கள்


'ஏன் கிடைக்காதற்காக ஏங்குறீங்க?...இங்கே நம்மை மாதிரி எத்தனை பேர்....' மனைவியின் யோசனை 
பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது
இல்லை நாம்தான் பழமைவாதியாகவே  இருக்கிறோமோ...தெரியவில்லை...


மீண்டும் மகனின் நினைப்பு மனதில் 
சிறு பருவத்தில் அந்த கண்களில் தெரிந்த குறும்பு 
வாலிபத்தில் கண்கள் தாழ்த்தி பார்த்த ஓரப்பார்வை
திருமணத்திற்குபின் சரிசமமான நிமிர்ந்த ஒரு பார்வை 
தள்ளி சென்றபின் அவன் கண்களில் தெரிந்த வெறுமை 
தன்னருகில் அவனை இருத்தி, தலை கோதி,
அவன் கைபிடித்து, அதில் முத்தமிட்டு,
முகம் புதைக்க ஆசை வந்தது...


கைப்பேசி கிணுகிணுத்தது 
'அப்பா...Happy Fathers Day...'
அவன் குரல்....
கண்ணீர் என் கண்களில்... 
வாசல் பிள்ளையார் சிரிப்பில்....





Comments

  1. மனதை தொட்ட பதிவு..

    ReplyDelete
  2. ஆண்களின் வலி வெளியே தெரியாது அதை அவர்கள் மனதுக்குள்ளே புதைத்து விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. தன் பிள்ளைகளை பற்றிய கனவுகளும் ஆசைகளும் தாயை போலவே தகப்பனுக்கும் இருக்கும். ஆனால் வெளிக்காட்டாமல் அமைதியான நீரோடையை போல இருப்பார். நாமாகத்தான் அவரை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பார்....நன்றி....

      Delete
  3. நெகிழ்ச்சியான பதிவு.!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து பதிவுக்கு நன்றி....

      Delete
  4. வாடத் துவங்குகிற செடிக்குத்தான்
    வேரில் விழுகிற சொட்டு நீரின் அருமை தெரியும்
    பெருமழைக்குத் தெரிய வாய்ப்பில்லை
    உங்கள் சிந்தனைத் திறத்தின் உயரம் காட்டும்
    அருமையான பதிவு
    உங்கள் உயரத்திற்கான பதிவுகளை அதிகம் எதிர்பார்த்து...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....

      Delete
  5. கைப்பேசி கிணுகிணுத்தது
    'அப்பா...Happy Fathers Day...'
    அவன் குரல்....
    கண்ணீர் என் கண்களில்...
    வாசல் பிள்ளையார் சிரிப்பில்....

    என் கண்களிலும் நீர் அரும்புகள் ,
    அழகான வடிவமைப்பு ,
    அன்னையர் தினத்துக்கு பதிவுகள் அநேகம் ,
    தந்தையர் தினத்துக்கு தேட வேண்டி உள்ளது .
    நன்றி ,சகோதரி

    ReplyDelete
    Replies
    1. ஒரு முதிய தம்பதியரின் உண்மை கதைதான் இது....தந்தையர் தினம் வாழ்த்து மட்டும் தான் நான் இணைத்தது...
      நன்றி...

      Delete
  6. உள்ளம் கவர்ந்த பதிவு

    பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி...

      Delete
  7. மனைவியின் யோசனை
    பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது
    இல்லை நாம்தான் பழமைவாதியாகவே இருக்கிறோமோ...தெரியவில்லை...

    ஆண்களின் மனம் பேசுவதை
    அழுத்திக் காட்டியிருக்கிறீர்கள் அகிலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் நம் குடும்பங்களில் சந்திக்கும் ஆண்களின் மனநிலை இப்படிதானே இருக்கிறது....

      நன்றி...

      Delete
  8. நெகிழ்ச்சியான பதிவு அகிலா மேடம்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந