Skip to main content

சித்திரங்கள் பேசும்.....

சித்ரகலா அகாடமி......

34வது ஓவிய கண்காட்சி 
கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கம், கோவை 
பிப்ரவரி 15 முதல் 19 வரை 



அந்த அரங்கம் ஓவியங்களின் வண்ண கலவைகளை உள்வாங்கியிருந்தது
சித்திரங்களால் தத்துவரூபமாகி போயிருந்தது 

தூரிகைகளின் அட்டகாசங்களும் 
வண்ணங்களின் வீச்சுகளுமாக 
தடுக்கினால் மாடுகளும் தென்னைகளும்
நிமிர்ந்தால் வானமும் மலையுச்சியும் 
காதலில் கண்ணனும் ராதையும் 
ஒத்தையடிசாலையில் மாட்டுவண்டிகளும் 
என்ன ஒரு இனிய விரிதல் கண்முன்னே 
நிஜங்களா இவை?
இல்லை.....
தூரிகைகளின் நிழல்கள்.....

வெளிவர மனதில்லை ஓவியகூடத்தைவிட்டு...
இவையெல்லாம் நம் வீட்டின் சுவர் ஆகாதா என்ற ஏக்கம்...
சிறு குழந்தைகள் கூட பெரிய ஓவியர்களான அதிசயம்....
ஓவியங்கள் கூட நம்மை அழகாக்குமா...
வண்ணங்கள் நமக்கு வானவில்லை காட்டுமா....
பார்த்துவர ஆசைப்பட்டு போனேன்.....
ஆச்சிரியமாய் பார்த்துவிட்டு வந்தேன்.....




கூடுதல் தகவல் 
சித்ரகலா அகாடமியில் கடந்த 34 வருடங்களாக ஞாயிறுதோறும் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கிறார்கள்....... 
தொடர்புக்கு : 9363145521 ; 9894149275 



சில ஓவிய துளிகள் 









Comments

  1. நல்ல ஓவியங்கள்,வாழ்த்துக்கள் மேடம்.அதிலும் கடைசி ஓவியம் இன்னும் மனதில் சிறகடிக்கிறது.

    ReplyDelete
  2. இன்னும் நிறைய ஓவியங்கள் சித்ரகலா அகாடமி அங்கத்தினர்கள் வரைந்தது மற்றும் அங்கு பயிலும் குழந்தைகள் வரைந்தது....ரொம்ப அழகு....
    நன்றி விமலன்....

    ReplyDelete
  3. அருமையான பதிவு.. ஓவியர்களின் தூரிகைகள் உயிர்ப்புடன் இருக்கும் வலை வாழும் இக்கலை. -suresh seenu

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.....

      Delete
  4. nalla thakaval...oviya kankaachchi manathil vanthu selkirathu...valththukkal pakirvukku

    ReplyDelete
    Replies
    1. என் நன்றிகள், சரவணன்....

      Delete
  5. உங்கள் எழுதோவியத்தோடு நீங்கள் இணைத்து இருந்த ஒவியங்களும் மிக அழகு. ஒவியம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதோடு அதை வரைவதால் மனதுதை ஒருமுனை படுத்தவும் முடிகிறது. நல்ல தகவல்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லி இருப்பது போல் ஓவியகலை என்பது மனதை ஒருமுகபடுத்தவும் சாந்தபடுத்தவும் உதவுகிறது......
      உங்களின் வருகைக்கு நன்றி....

      Delete
  6. முடிந்தால் வோர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள் அதனால் எந்த பயனும் இல்லை மேலும் அதிக கமெண்ட் கிடைக்க வழியுண்டு.

    ReplyDelete
  7. எதைச் சொல்ல, எதை விட... அனைத்துச் சித்திரங்களுமே கண்ணையும் கருத்தையும் கவர்கின்றனவே... நானும் ஆச்சரியமாகவே பார்க்கிறேன் இந்த ஓவியங்களை! 34 வருடங்களாக இளஞ்சிறுவர்களுக்கு ஓவியம் கற்றத் தந்து ஊக்குவிக்கும் சித்ரகலா அகாடமிக்கு பாராட்டுகள்+ நல்ல விஷயத்தைப் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்குரியவர்கள் சித்ரகலா அகாடமி உள்ளவர்கள் தான்....ஓவியர் ஜீவா அவர்கள் முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.....
      உங்கள் வருகைக்கு நன்றி....

      Delete
  8. மிக மிக அருமைங்க எந்த ஓவியமும் வரைந்தது போல இல்லாம புகைப்படம் போல அத்தனை அழகு .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சசி, குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.....நன்றி சசி....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி