Skip to main content

மறக்கலாமா?

மறக்குமா ? மறக்கத்தான் முடியுமா?






மாடிப்படியில் குதித்து ஏறியபோது 
இடறிய பாவாடையும் 

ரயில் பிடித்து நடக்கும் போது 
கிழிந்த சட்டையும் 

கண்ணாமூச்சி ஆடும் போது 
ஒளிந்து கொண்ட மாட்டு கொட்டகையும் 

மாடி படிகட்டின் இடுக்கில் அமர்ந்து 
படித்த கதை புத்தகங்களும்   

ரயில்வே கேட்டில் உட்கார்ந்து கொண்டு 
எண்ணிய புகைவண்டியின் பெட்டிகளும் 

தூது எடுத்துபோன அக்காவின்
காதல் கடிதங்களும் 

சித்தியின் வளைகாப்பில்
அடுக்கிய கண்ணாடி வளையல்களும்

பெருமாள் கோயில் போவதாக சொல்லி 
ஊர் சுற்றிய பெருமாள்புரமும்

இறங்க பயந்து காலை மட்டுமே 
நனைத்த தாமிரபரணி ஆறும் 



மறப்பது சுலபமா?

இந்த மாய உலகில் மறந்தது போல் நடிப்பது சுலபமா ?





Comments

  1. நெஞ்சில் புதையுண்ட நினைவலைகளை
    அழகாக சொல்லியிருகீங்க சகோதரி.
    அதுவும் எங்க ஊருக்கு பக்கத்து ஊரு
    திருநெல்வேலி நினைவுகள் ... அருமை.

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கையில் என் தளம் வந்து பாருங்கள்.
    நன்றிகள் பல.

    http://ilavenirkaalam.blogspot.com/2011/12/blog-post_29.html

    ReplyDelete
  3. தங்கள் பதிவைப் படித்துக் கொண்டே வருகையில்
    என் மனமும் இதுபோல் மறக்க முடியாது நெஞ்சில்
    சிலையாய் படிந்து போன பழைய நினைவுகளில் மூழ்கித் தவித்தது
    வெளி மறுத்து அடம் பிடித்தது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒவ்வொரு முறை ஊருக்கு சென்றுவிட்டு வரும் போதும் எனது மண்ணின் நினைவுகளை சுமந்து கொண்டுதான் வருகிறேன்.என் பதிவையையும் மதித்து வந்து கருத்து கூறியமைக்கு நன்றி, நண்பர்களே ....
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் 2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில் கொடுத்துள்ளார். அவற்றுள் எனது நாவலான தவ்வை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகிழ்வும் அன்பும் 🙏 லிங்க் 👇 தவ்வை