Skip to main content

என் அன்னை...



இன்றைய நாளில்...



உருண்டோடிவிட்டன வருடங்கள் உன்னை இழந்து
பால்யமும் பள்ளியும் மட்டுமே நினைவில் நிறுத்திவிட்டு
மீதி வாழ்க்கை உன் கையில்தான் என்று கொடுத்துவிட்டு
இந்த மண்ணையும் என்னையும் விட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டாய்....

இன்றும் உன்னை நினைக்க ஆயிரம் காரணங்கள்
மனதின் துயரங்கள் எல்லையை தாண்டினால்
உன் முகம் காட்டும் என் கண்ணாடி
அழுவதை நிறுத்தி என் அகம் பார்த்திருக்கிறேன் அதில்...

தைரியம் என்னும் வார்த்தையை
ஏட்டிலிருந்து எண்ணத்திற்கு மாற்றியவள் நீ
சமாதானம் என்னும் சொல்லை
சாசுவதமாய் மனதில் நிறுத்தியவள் நீ...

நாணிகோணி நடக்க சொல்லித் தரவில்லை
நிமிர்ந்து நடக்க சொல்லித் தந்தாய்
சண்டையிட கற்றுத் தரவில்லை
சமரசமாய் வாழ கற்றுத் தந்தாய்

உடைந்து போய் நின்றால்
அதை கடந்து போக சொல்லித் தந்தாய்
உவகை அதிகமானாலோ
அமைதியாய் உட்வாங்க சொல்லிச் சென்றாய்

என் முதல் நூலின் நகலொன்றை
எடுத்து வைத்தேன் உனக்காக  
கையொப்பம் ஏதும் இடாமல்
உன் நகல் நான்தான் என்பதால்...  
  
எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில்
உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....
  
அழைக்கிறார்கள் மகளீர் தின வாழ்த்துரைக்க
மகளாய் நான் தனித்து நிற்பதை அறியாமல்...   





Comments

  1. மகளிர் தினத்தில் உங்களை சிறந்த மகளா(ளிர்)க்கிய உங்கள் தாயை நினைத்து பார்த்தல் பொருத்தம்.... ஓரமாய்த் ஒளிந்திருக்கும் உங்கள் ஏக்கம் புரிகிறது அகிலா..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....எப்போது நினைத்தாலும் தீராத பாசம் அது....இன்று அவர்களின் நினைவு நாள்....

      Delete
  2. வலி நிறைந்து இருக்கிறது

    ReplyDelete
  3. எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில்
    உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....
    நடப்பின் நினைவு.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவின் நினைவு நாளான இன்று தான் என்றில்லை...எப்போதுமே தோன்றும் நினைவு இது....

      Delete
  4. அம்மாவின் வியர்வையில் வெந்த இட்லிக்கு
    எம்மாம் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்தோம்
    அவளின் முந்தானை வியர்வை வாசம்
    எவரிடமும் இல்லாத நேசம்!

    அம்மாவைப் பற்றி எழுதுவதற்கு
    அடக்கம் அவளிடம் அடைக்கலம் கேட்கும்
    பண்பு அவளிடம் பணிவிடை செய்யத் துடிக்கும்
    நல்லொழுக்கம் அவள் முன்னே நாணி நிற்கும்

    கடல்நீரை மையாக்கி
    கருவில் வைத்தவளை கருவாக்கி
    பாடல்கள் எத்தனை எழுதினாலும்
    பற்றாக்குறை என்பது உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அழகான உங்களின் கவிதை அம்மாவின் அன்பை காட்டுகிறது...நன்றி...

      Delete
  5. அருமை அகிலா .உண்மையில் பெற்றவளை விட்டுவிட்டு பிறிதொன்றை வாழ்த்த முடியுமா? இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....ஆனாலும் வாழ்கிறோம்....வாழ்த்துகிறோம்...

      Delete
  6. அன்னைக்கு என் பாத நமஷ்காரங்கள்

    ReplyDelete
  7. அன்னையை விட சிறப்பெது...?

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி