Skip to main content

மனமே.....

நிறுத்து.......



sketched by me


ஒன்றை நினைத்து ஏங்குவது
மற்றொன்றை நினைத்து மருகுவது 
அடுத்ததை நினைத்து அலைவது 
எத்தனை நினைப்புதான் உனக்கு 
நிறுத்து மனமே 
உன் லீலைகளை 
உன்னால் நான் படும்பாடு 
மாறாதே ஒரு எண்ணத்திலிருந்து 
மாற்றாதே என்னையும் 
நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாமோ?




Comments

  1. Replies
    1. நன்றி சௌந்தர்......

      Delete
  2. தாவிச்செல்லும் மனதிற்கும்
    கடிவாளம் போட்டுவிடத் துடிக்கும்
    அழகுக் கவிதை..
    வரைபடம் மிக அழகு சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்.....

      Delete
  3. //எத்தனை நினைப்புதான் உனக்கு
    நிறுத்து மனமே
    உன் லீலைகளை //

    உண்மைதாங்க... மனது தன் லீலைகளை நிறுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை...

    ReplyDelete
  4. நல்ல கவிதை.
    அருமையான ஓவியம். இன்னும் முயற்சி செய்யுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ஐயா....

      Delete
  5. அருமையா சொல்லிட்டிங்க போங்க!


    மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    ReplyDelete
    Replies
    1. நல்லவைகளை எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றுதான். செய்கிறேன் சூர்யா.....நன்றி...

      Delete
  6. மனம் ஒரு திமிரெடுத்த கிடா
    அது வளர்ந்த்தவன் மேல் பாய்வதிலேயே
    அதிக அக்கறை கொள்ளும்
    ஐம்புலனால் பாலூட்டி வளர்க்கப் பட்டாலும்
    ஐம்புலனையும் படுத்தி எடுப்பதில் அதற்கு ஈடு அதுதான்
    மனம் ஒரு போர்வாள்
    அதன் கூர்மைதான் அதன் சக்தி
    மொட்டைக் கத்தியால பயனில்லை
    கத்தியை கூர்மையாகவும் உறையிலிட்டும்
    தேவையான போது திறம்பட பயன்படுத்தத் தெரிந்தவன்
    புத்திசாலி.சிறந்த வீரன்
    தன்னையே தாக்கிவிடுமென கூர்மையின்றி வைத்திருப்பவன்
    கோழை.முட்டாள்
    சிந்தனையை கிளறிச் செல்லும் அருமையான பதிவு
    கவிதை சட்டெனத் துவங்கி சட்டென அடைமழை போல்
    முடிந்ததைப் போல் இருந்தது
    மனம் குறித்த தங்கள் பதிவு
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தே கவிதையாகிவிட்டது, கவிஞரே....

      Delete
  7. மனமில்லாத மனிதர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். உங்கள் கற்பனையும் நீங்கள் தீட்டிய ஓவியமும் நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  8. மனம் ஒரு கரையில் நிற்பதில்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க....!!!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தானே நண்பரே....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி