Skip to main content

Posts

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு
Recent posts

இங்கிலாந்தில் நான்: பார்வை 3

  ஆடை தேர்வுகள் குளிர் பிரதேசங்களில், வீடுகளுக்குள் ரேடியேட்டரின் புண்ணியத்தில் மிதமான வெப்பத்தில் இருக்கலாம்; முன் அல்லது பின் கதவைத் திறந்தால், சில நேரங்களில் வெளியே அடிக்கும் வெயில் இதமாய் இருக்கலாம்; சரி, நடக்கப்போவோம் என்று ஏமாந்தும் கூட மேலே Jacket இல்லாமல் போய்விட முடியாது. அடிக்கும் குளிர்ந்த காற்றின் வேகம் நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடக்கூடும். பிரித்தானியா மாதிரியான தொடுவானம் அருகில் இருக்கும் தீவுகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வீசும் காற்றின் வேகத்தை, அந்த நிலப்பரப்பில் இருக்கும் குன்றுகள், சிறு மலைகள், கடல் முகத்துவாரங்கள், வளைந்தோடும் ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் போன்றவை அதிகப்படுத்தி சமவெளிகளில் வீசும். அடுத்த காரணமாக, அதன் மேலிருக்கும் ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து வீசும் தூந்த்ரா அதிவேக குளிர் காற்றலைகள் (Polar Jet Streams), இந்த காற்றை அதிகமான குளிருக்குள் கொண்டு செல்கிறது. பிரித்தானியா தீவின் வடபகுதியில் இருக்கும் ஸ்காட்லாந்தில், காற்று அறுவடை பண்ணைகள் (Windfarms) அதிகம். அதுவே, அங்கு மின்சாரம் கொடுக்கும் மிக முக்கியமான அமைப்பாகும். அத

இங்கிலாந்தில் நான்: பார்வை 2

ஆற்றங்கரை நாகரிகங்கள் (இங்கிலாந்து)  (என் அடுத்த பயணநூலில் இருந்து..)  ~~~~~~~~~~~~~~~~ இன்றைய நூலக வாசிப்பின்போது, பிரித்தானியா நாட்டில் மனித குடியேற்றங்கள், பழைய கற்காலத்திலிருந்து (பேலியோலிதிக் (Palaeolithic)) தொடர்ந்தபோதும், அவ்வப்போது மனிதர்கள் இல்லாதிருந்து விடுபட்டு போன காலகட்டங்களும் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றிற்கான காரணங்களாக சொல்லப்படுவது, சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஆர்க்டிக் பகுதி பனிப்பாறைகள் உருகுதல், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் பனிப்பாறைகளால் உண்டான உடைதல்கள், இப்பிரதேசத்தில் மனிதனின் நிரந்தர குடியேற்றங்களில் தடைகள் இருந்துவந்தன என்பதே.  விவசாயம் பிரதானமாக இல்லாமல், வேட்டை தொழிலும், விலங்குகள் வளர்த்தலும் இங்கிருந்த மனித நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததற்கான காரணங்களும் இவைதான். மெசோலிதிக் எனப்படும் மத்திய கற்காலத்தில் தான் மனிதர்கள் பிரித்தானியாவின் வடக்காக நகர்ந்து ஸ்காட்லாந்தை நெருங்கினர். அதற்கு முன்பு வரை அப்பகுதியும் மனிதர்கள் வசிக்கும் தன்மையில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. பழைய கற்காலத்தின் முக்கிய நாகரிகமாக கருதப்படும் யூப்ரதீஸ

இங்கிலாந்தில் நான்: பார்வை 1

கற்பிதங்களை உடைத்தல்   'ஒரு இட்லி உண்டா, பொங்கல் உண்டா..' 'வறட் வறட்டென்று பிரேட்டை காலையில் சாப்பிடுகிறார்கள் வெளிநாட்டுக்காரங்க..' 'நீங்க அங்க போனா என்ன சாப்பிடுவீங்க..' என்றெல்லாம் என் UK பயணங்களுக்குப் பிறகு, இங்கிலாந்தின் உணவு முறை சார்ந்து என்னை நோக்கி கேள்விகள் வந்திருக்கின்றன. நேற்றும் கூட என்னிடம் பேசிய பிரண்ட் ஒருத்தி, 'நீ போயிருக்கேயில்ல, பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு செஞ்சு கொடு' என்றாள். அப்ப, இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் மக்கள் சாப்பிடுவதெல்லாம் கெட்டது என்று எப்படி இவர்களாக முடிவு செய்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இது குறித்து பட்டிமன்றங்களிலும் விவாதங்களிலும் கூட பேசி சந்தோஷப்பட்டுக் கொள்வதைக் காணமுடியும். இது உணவு சார்ந்து. இது தவிர, அவர்களின் திருமண வாழ்வு சார்ந்து, ஆண்-பெண் நட்பு/உறவு சார்ந்து பல அனுமானங்களுடன் என்னிடம் கேட்டவர்கள் அதிகம். உலகில் வாழும் மற்றவர்களின் பண்பாடு, சமூகம் போன்றவைக் குறித்த தாழ்வான கருத்துகள் நம்மிடையே நிலவுவதும், நம் கலாசாரம்தான் சிறந்தது என்று கொடி பிடிப்பதும் அபத்தமென நினைக்கிறேன். அவர்களுக்குள்ள

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி

காதல்: The Core | Review | ஒரு பார்வை

காதல்: அதன் மூலம்  Kadhal: The Core  இயக்கம்: ஜியோ பேபி எழுதியவர்: ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியா நடிகர்கள்:    மம்முட்டி, ஜோதிகா  ஒளிப்பதிவு:     சாலு கே. தாமஸ் எடிட்டிங்: பிரான்சிஸ் லூயிஸ் இசை: மாத்யூஸ் புலிக்கன் தயாரிப்பு நிறுவனம்: மம்முட்டி கம்பனி காதல்: தி கோர்  பேசப்படாத பல விடயங்கள் இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்பாலினச்சேர்க்கை, திருநங்கைகள்/நம்பிகள் குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவதற்கு, திரைப்படமாக எடுப்பதற்கு, இன்னும் இங்கு சமூகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஏன் பேசவேண்டும், இருக்கிற சமூக சீர்கேடுகள் போதாதா, expose பண்ணுவதாலே தான் அதிகப்பட்டு போகிறது, இப்படி போனா இனி ஆணுக்கும் பெண்ணுக்குமான கல்யாணம், சந்ததி வளருதல் இல்லாமல் போய்விடாதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன..  சிலருக்கு பிடித்திருந்தும், எதுக்கு இதெல்லாம் என்கிறார்கள்; சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதனால் மொத்தமாக மறுக்கிறார்கள்; சிலர் ஏன் மலையாள படங்களில் அதிகமாக கிறித்துவ, இஸ்லாம் மதத்தினரை வைத்து எடுக்கிறார்கள் என்று மதத்தை முன்வைக்கிறார்கள்; சிலருக்கு, ஓரினச்சேர்க்கை க

அறவி புதினம் குறித்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு - முனைவர் பெண்ணியம் பிரேமா

 அறவி: ஓர் பார்வை  காணொளி லிங்க்: அறவி : ஓர் பார்வை அறவி புதினம் குறித்த புத்தகத் திறனாய்வு - இணைய நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவினரால் நிகழ்ந்தது நேற்று (18.11.2023, 7.30 pm)  அறவி குறித்த கதைக்களத்தை விவரித்த முனைவர் பிரேமா அவர்கள், கதையின் பாடுபொருளை, கதை அமைப்பை, கதைக்களங்களான திருச்செந்தூர் மற்றும் இங்கிலாந்தில் நார்தம்ப்டன் சூழல் விவரிப்பின் நேர்த்தியையும் வெகுவாக பாராட்டினார்.  பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள், பெண்ணியத்தின் புதிய சிந்தனைகள் என்று நேற்றைய அறவி புத்தகத் திறனாய்வின் பக்கங்களை, அவற்றை நோக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் மேடையாக்கி, 'பெண்ணியம்' பிரேமா அவர்களால் அருமையாக மாற்றிக்கொடுக்க முடிந்தது வியப்பே.  இந்த புதினத்தின் தலைப்பால், அறவி என்பது இல்லறத்துள் பெண் துறவைக் குறிக்கும் சொல்லாக மாறியிருப்பதாக அவர்கள் உரைத்தபோது மகிழ்வாக இருந்தது.  பெண்ணின் உடலியல் பிரச்சனைகளைப் பேசும் ஒரு புதினத்தால், அவளின் வெளியழகை பேசாமல், அவளின் அகத்தை மட்டும் பேசியிருப்பது, பெண்ணை முன்னிலைப்படுத்திய புதினங்களில் என் பார்வையில் இதுவரை யாரும் இவ்வாறு எழுதியதில்லை என்று அவர் பேச