Skip to main content

தூரந்தோ எக்ஸ்பிரஸ்.....


உள்ளே வெளியே....





கார்போரெட் பேச்சுகளும்
தமிழை தொலைத்த
ஆங்கில சொற்களும்
செல்லின் சினுங்கல்களும்
லேப்டாப்பில் அலுவலும்
தோழமையில் போலிதனங்களும்
சத்தமான சிரிப்புகளும்
சில சமயங்களில் மௌனங்களும்
அமுல் பட்டரும் சூப் ஸ்டிக்குகளும்
ரயிலின் உள்ளே.....

இணையாய் ஓடும் ரயில்கோடுகளும்
நம்மை கடக்கும் புகைவண்டி நிலையங்களும்
மொட்டை பனைமரங்களும்
சின்ன சின்ன வீடுகளும்
சிவப்பாய் ஒரு சூரியனும்
நம் காயங்களுக்கெல்லாம் கட்டு போடும்
வெளிச்சமாய் ஒரு வானமும்
ரயிலின் வெளியே.....

நான் உள்ளே
என் மனம் வெளியே.....

Comments

  1. //நான் உள்ளே
    என் மனம் வெளியே.....//

    கவிதை அழகோ அழகு !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    vgk

    ReplyDelete
    Replies
    1. என் மனதில்பட்டவை இவை....உங்களின் பாராட்டுக்கு நன்றி...

      Delete
  2. கடைசி இரண்டு வரிகள் மட்டுமே தனிக் கதை சொல்கின்றன. நிறைய நேரங்களில் என் மனதும் இப்படிப் பறந்ததை நான் ரசித்து அனுபவித்ததுண்டுங்க அகிலா, ஹேட்ஸ் ஆஃப்!

    ReplyDelete
    Replies
    1. நான் அனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு....

      Delete
  3. நச்சுன்னு ஒரு கவிதை...

    அனுபவம் பேசுகிறது...

    ReplyDelete
    Replies
    1. குளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....

      Delete
  4. நான் உள்ளே
    என் மனம் வெளியே...../// ட்ரெயினோ, க்லாஸ் ரூமோ, எதா இருந்தாலும் சரி இதுதானே மனிதனுடைய மன நிலை! அழகான கவிதை. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. அக்கரைக்கு இக்கரை பச்சைதானே...நன்றி....

      Delete
  5. என்னை மாதிரி தான் எல்லோரும் போல....நன்றி....

    ReplyDelete
  6. அழகான எழுத்துநடை சகோ ...

    ReplyDelete
  7. அனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்..

    குளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....

    கவிதையைப்போலவே தங்கள்
    பின்னூட்டங்களுக்கான பதில்களும்
    கவித்துவமாய் இருப்பது கண்டு ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி...பின்னூட்டங்களுக்கும் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி ரமணி அவர்களே...

      Delete
  8. arumai...

    my blog "http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html"

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கடேசன்..உங்களின் பதிவை பார்த்தேன்.அழகான எழுத்து...

      Delete
  9. " நான் உள்ளே
    என் மனம் வெளியே..... "

    அருமை சகோ ,
    யதார்த்தமான கவிதை பயணம் .அழகு

    ReplyDelete
  10. இன்றைய வாழ்வியலை பதிவு செய்துள்ள கவிதை

    ReplyDelete
  11. Arumaiyana kavithai ma.ikkaraikku akkarai pachai .Good contribution ma.by DK.,

    ReplyDelete
  12. முதல் முறையா உங்க இடத்துக்கு வர்றேன். கவிதையால என்னைக் கட்டிப் போட்டுட்டீங்க. ரொம்பவே ரசிச்சேன் கருப்பொருளை. சூப்பர்ங்க.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நிரஞ்சனா.....
      மற்ற கவிதைகளையும் படிச்சி பாருங்க, உங்களுக்கு பிடிக்குதான்னு.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந