உள்ளே வெளியே....
தமிழை தொலைத்த
ஆங்கில சொற்களும்
செல்லின் சினுங்கல்களும்
லேப்டாப்பில் அலுவலும்
தோழமையில் போலிதனங்களும்
சத்தமான சிரிப்புகளும்
சில சமயங்களில் மௌனங்களும்
அமுல் பட்டரும் சூப் ஸ்டிக்குகளும்
ரயிலின் உள்ளே.....
இணையாய் ஓடும் ரயில்கோடுகளும்
நம்மை கடக்கும் புகைவண்டி நிலையங்களும்
மொட்டை பனைமரங்களும்
சின்ன சின்ன வீடுகளும்
சிவப்பாய் ஒரு சூரியனும்
நம் காயங்களுக்கெல்லாம் கட்டு போடும்
வெளிச்சமாய் ஒரு வானமும்
ரயிலின் வெளியே.....
நான் உள்ளே
என் மனம் வெளியே.....
//நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே.....//
கவிதை அழகோ அழகு !
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
vgk
என் மனதில்பட்டவை இவை....உங்களின் பாராட்டுக்கு நன்றி...
Deleteகடைசி இரண்டு வரிகள் மட்டுமே தனிக் கதை சொல்கின்றன. நிறைய நேரங்களில் என் மனதும் இப்படிப் பறந்ததை நான் ரசித்து அனுபவித்ததுண்டுங்க அகிலா, ஹேட்ஸ் ஆஃப்!
ReplyDeleteநான் அனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு....
Deleteநச்சுன்னு ஒரு கவிதை...
ReplyDeleteஅனுபவம் பேசுகிறது...
குளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
Deleteநான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே...../// ட்ரெயினோ, க்லாஸ் ரூமோ, எதா இருந்தாலும் சரி இதுதானே மனிதனுடைய மன நிலை! அழகான கவிதை. நன்றி!!
அக்கரைக்கு இக்கரை பச்சைதானே...நன்றி....
Deleteஎன்னை மாதிரி தான் எல்லோரும் போல....நன்றி....
ReplyDeleteஅழகான எழுத்துநடை சகோ ...
ReplyDeleteநன்றி ராஜா....
Deleteஅனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்..
ReplyDeleteகுளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
கவிதையைப்போலவே தங்கள்
பின்னூட்டங்களுக்கான பதில்களும்
கவித்துவமாய் இருப்பது கண்டு ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி...பின்னூட்டங்களுக்கும் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி ரமணி அவர்களே...
Deletearumai...
ReplyDeletemy blog "http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html"
நன்றி வெங்கடேசன்..உங்களின் பதிவை பார்த்தேன்.அழகான எழுத்து...
Delete" நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே..... "
அருமை சகோ ,
யதார்த்தமான கவிதை பயணம் .அழகு
நன்றி சக்தி...
Deleteஇன்றைய வாழ்வியலை பதிவு செய்துள்ள கவிதை
ReplyDeleteநன்றி எழில்....
DeleteArumaiyana kavithai ma.ikkaraikku akkarai pachai .Good contribution ma.by DK.,
ReplyDeletethanx DK....
Deleteமுதல் முறையா உங்க இடத்துக்கு வர்றேன். கவிதையால என்னைக் கட்டிப் போட்டுட்டீங்க. ரொம்பவே ரசிச்சேன் கருப்பொருளை. சூப்பர்ங்க.
ReplyDeleteரொம்ப நன்றி நிரஞ்சனா.....
Deleteமற்ற கவிதைகளையும் படிச்சி பாருங்க, உங்களுக்கு பிடிக்குதான்னு.....