Skip to main content

Posts

Showing posts from March 2, 2014

என் அம்மா...

இன்றைய விடியலின் முகத்தை உன் முகமாக்கினாய் உயிரை பிரித்து உடலை இங்கிருத்தி விட்டு நீ விட்டுச்சென்ற வாழ்க்கையில் உன் பதவியின் கனம்  எனதாகிப்போனது    என் பின் பிறந்தோர்க்கு நீ இருந்த பொழுதுகளில், சன்னல் தொட்ட காற்றை திரைசீலையுடன் மட்டுமே பேசச் செய்தாய் எண்ணெயிடாத என் தலைமுடியை பூவைத்து பின்னலிட்டு இறுக்கினாய் ஜார்ஜெட் தாவணிக்கு கூட கஞ்சி போட்டு என் இடுப்பில் சொருகினாய் அம்மா, நீ இட்டவை  இலட்சுமண கோடுகள்தான் சில அத்துமீறல்களுடன் தாண்ட முயற்சித்து வென்றும் தோற்றும் பயணப்பட்டிருக்கிறேன் பிள்ளைகள் பெரிதானால் பின்னலிடாமல் கொண்டையிடும்   உன்னைப் போல் நான் இல்லைதான்... இருந்தும், அன்பில் நான்   உன்னை போலவே என்றும் இருக்க வேண்டியிருக்கிறேன்... ..

பெண்களும் அவர்களின் கூச்சமும்...

மகளீர் தினம்... நம்ம நாட்டில அடுப்படியே கதின்னு வாழ்ந்துக்கிட்டிருந்த பெண்ணினம் ராக்கெட் ஏறி இறங்கியாச்சு. காலையில் இருந்து வாழ்த்து சொல்லி வாழ்த்து கேட்டு சந்தோஷமா இருக்கு. கணவர், பையன்னு வீட்டுல இருக்கிற ஜனத்தொகை கூட வாழ்த்து சொல்லியாச்சு. இது இன்னைக்கு மட்டும்தான். மத்த நாள்ல எப்படின்னு எங்களுக்குதான் தெரியும். ஏகப்பட்ட சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. உண்மைதான். கல்வியில், வேலையில், கலைத் துறைகளில், வீட்டில் என்று இருக்கிறதுதான். இது பெரும்பாலும் நகரத்து பெண்களுக்கு சற்று அதிகமாகவே கிடைக்கிறது. டவுன் பெண்கள் பட்டணத்துக்கு வந்து சிறுசேரியிலும் சோலிங்கநல்லூரிலும் இறங்கியவுடன் அவங்களுக்கும் கிடைத்துவிடுகிறது. முகம் மாறுது, டிரெஸ், செருப்பு, ஹேர் ஸ்டைல் எல்லாம் மாறிப்போகுது. ஆனாலும் அடிப்படையான ஒரு விஷயத்தில் மட்டும் பெண்களுக்கு இன்னும் விடிவுகாலம் சரியாக வரவில்லை. அதைதான் நான் இங்கே சொல்ல நினைக்கிறேன்....    ஒரு பயணத்தின் போது, என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி சற்று நேரமாகவே நெளிந்துக் கொண்டிருந்தார். என்னை தாண்டிதான் அவர் ரெஸ்ட்