Skip to main content

Posts

Showing posts from February 24, 2013

மௌனங்கள் பேசுவதில்லை...

உள்ளிருக்கும் மௌனம்  எங்கோ இழுத்துக் செல்கிறது உடையும் சாத்தியகூறுகளுடன்... ஆராதனைகள் இல்லாத கர்ப்பகிரகமாய்  நதியின் தழுவலில்லா நாணல்களாய்  கால்கள் கட்டப்பட்ட புறாவாய்  மீண்டும் தனித்து விடப்பட்டு  பாதை தவறோ பயணித்தவனின் தவறோ  இதய சுவர்கள் முழுவதும்  உன் பெயர் கொண்டு ஆணியடித்து திரும்பினால்  மௌனம் என் பின்னே பனிக்கட்டியாய்... 

ரயில் பயணங்களில் 3....

அருகில் ஆண்கள்... என் பயணங்கள் பெரும்பாலும் ரயிலில்தான். அதனால் அவை எனக்கு மிகவும் பிடித்தவைகளாகிப் போனது.  ரயில் பயணங்களின் போது விதம் விதமான பெண்களை சந்திக்கிற சந்தர்ப்பங்களும் கிடைக்கிறது....பாவம் என்கிட்டே வந்து அவங்களா மாட்டுறாங்க.... நான் முதல்ல பேசாமதான் இருப்பேன். பக்கத்துல உட்கார்ந்துகிட்டு 'வேலைக்கு போறீங்களா...' என்று ஆரம்பிப்பாங்க...'ம்ம்ம்...' என்று சொல்லிவிட்டு என்பாட்டுக்கு காதில் earphone மாட்டிக் கொண்டு உட்கார்ந்துவிடுவேன் ஒரு ஆங்கில நாவலுடன். அதைத்தான் யாரும் கடன் கேட்கமாட்டார்கள். ஒரு முறை பயணத்தின் போது என்னருகில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஆரம்பம் முதல் சென்னை வந்து சேரும் வரை அவரின் மூட்டு வலியே என் காதுவலி ஆகிப்போனது....ஒரு தைலம் எடுத்து தடவிவிட்டு அதற்கான காரணத்தை ஒரு அரை மணி நேரம் விளக்கியிருப்பார்... இன்னொரு முறை ஒரு பெண்மணி என்னை இடம் மாறி அமரச் சொன்னார். எதற்கு என்ற என் கேள்விக்கு,  அவரின் பதில் இதுதான்.... ஒரு ஆணின் அருகில்  அமரமாட்டாராம் அதுவுமில்லாமல் தன் கணவரின் அருகில் தான் அமரவேண்டுமாம் பயணம் முழு

மாதவிடாய்......

ஆவணப்படம்... கடந்த ஞாயிறு மாலை என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் 'மாதவிடாய்' என்னும் ஆவணப்படம் கோவையில் திரையிடப்பட்டது. அன்று அது சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.  பெண்பிள்ளைகளின் மாதவிடாய் சிரமங்கள் குறித்த குறும்படம் இது. மிகவும் அருமையாய் எடுக்கப்பட்ட ஒரு படம்.  இந்த படத்தை அவரும் அவரின் கணவரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இது ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் ஆண், பெண் இருபாலாருமே பார்க்கவேண்டிய படம்.. குறிப்பாக பெண்களும் அவர்களின் பெண்குழந்தைகளும் பார்க்க வேண்டியது அவசியம்.  மாதவிடாய் என்பது என்ன, கிராமப்புறங்களில் அதை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி அந்த பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள், அந்த சமயங்களில் சுகாதாரமாய் இருக்க செய்யவேண்டியவை என்று நிறைய விஷயங்களை இந்த ஆவணப்படம் உள் அடக்கியிருக்கிறது.  இத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மாதவிடாய் குறித்த மக்களின் நடைமுறை பிரச்சினையை எடுத்துரைக்கிறது. அங்கு பழக்கத்தில் உள்ள முட்டு வீடு என்னும் ஒரு விஷயமும் கவனத்தில் கொண்டு