Skip to main content

Posts

Showing posts from November 1, 2015

மேய்ப்பனின் கிடையின் கீழ்..

மேய்ப்பனின் கிடையின் கீழ் இன்று அனேக ஆட்டுகுட்டிகள் சிறு ஆடுகளின் குரலுக்குள், சொட்டும் பாலின் வாசத்தில், ததும்புகிறது, தாயினது தாக்கம் காடுகள் அழிந்து, ஆந்தைகள் அலறும் கான்கிரீட் நகரத்தையும், அதனிடையே ஊடுருவும் இயந்திர இரைச்சல்களையும், புல் புசிப்பதாய் பாவனையிருக்கும் இம்மழலைகளின் விளிப்பும் மந்தை ஆடுகளின் பதில்களும் மறுத்துவிடுகின்றன சுற்றுசூழலில், நீண்டிருந்த இருண்ட மௌனத்தை, குறுகிய நிசப்தமென பறைசாற்றுகின்றன, மேய்ப்பனின் கிடையின் கீழ் மேயும் இந்த ஆட்டுகுட்டிகள்..