Skip to main content

Posts

Showing posts from February 2, 2014

குருவாயூர் - யானை கொட்டாரம்...

குருவாயூர் என்றதும் கிருஷ்ணர் கோவிலும் அதன் பிரகாரம் சுற்றும் யானைகளும் நம் நினைவுக்கு வருவது வழக்கம்.  ஸ்ரீ கோவில் நடை சாத்தும் நேரம் விளக்கு ஏற்றி சாமியை யானை மீதேற்றி உலா வரும் நேரம் சீவெளி (Seeveli)  ஆகும்.  கோவிலை சுற்றி மூன்று முறை நடைபெறும் இந்த சீவெளியின் சிறு ஒளிச்சித்திரம் இது : (http://www.youtube.com/watch?v=OJQKA-_KtAY) அன்று சாமி தரிசனம் முடித்து சீவெளி பார்க்க நின்றிருந்தேன். யானைகளின் அழகான தரிசனம், தன் மேல் அமர்பவர்களுக்கு கால் மற்றும் வால் சுருட்டி கொடுத்து தூக்கிவிடும் அதன் பழக்கம் எல்லாமே எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். கண்டிப்பாக ஆனக்கோட்டா (Anakkotta) செல்ல வேண்டும் என்கிற நினைவும் வந்தது. நான் ஒவ்வொரு முறை குருவாயூர் சென்று வரும் போதும் அங்கு சென்று யானைகளைப் பார்க்காமல் திரும்புவதில்லை.  குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானைகள் புன்னதூர்கோட்டா வில் உள்ள குறுநில மன்னரின் அரண்மனை தோட்டத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடம் குருவாயூரிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. வாகனம் நிறுத்தும்

நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை...

கடந்த வாரத்தில் ஒரு நாள் நண்பரின் இல்லத் திருமணத்திற்காக நாமக்கல் செல்லவேண்டியதாயிற்று. ஊருக்குள் நுழையும் போதே அந்த மலையும் அதன் மேல் கம்பீரமாய் இருந்த கோட்டையும் கண்ணில்பட்டது. எப்படியும் அதை பார்த்து வருவதென முடிவு செய்தேன்.  அந்த கோட்டைக்கு செல்லும் வழியை விசாரிக்கப் போனால், 'அங்கே ஒண்ணும் இல்லைங்க. சும்மா ஒரு இடிந்த சுவருதான் இருக்கு. ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில்தான். அதுக்கு போங்க...' என்று பொதுவாய் அநேகம் பேர் கூறினார்கள். நமக்குதான் அந்த வாசமே இல்லையே. வரலாற்றின் மீது மட்டும் எப்போதும் எனக்கு ஒரு பிரியமும் அதன் வழிதானே நாமும் வந்தோம் என்கிற நினைவும் உண்டு. அந்த மலை கோட்டைக்கு செல்ல படிகளும் அதையொட்டி பிடிப்புக் கம்பியும் போடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது.  வரலாறு : அனுமான் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது கமலாலயம் குளத்தினருகில் இறக்கிவைத்த விஷ்ணுவின் உருவமிட்ட சாலிகிராமம் என்னும் கல், அனுமான் ஸ்தானம் முடித்து வரும்போது நாமகிரி மலையாய் உருவெடுத்ததாக வரலாறு. அதன் பிறகு இரணிய வதம் முடித்த ந