Skip to main content

Posts

Showing posts from June 2, 2024

இங்கிலாந்தில் நான்: பார்வை 3

  ஆடை தேர்வுகள் குளிர் பிரதேசங்களில், வீடுகளுக்குள் ரேடியேட்டரின் புண்ணியத்தில் மிதமான வெப்பத்தில் இருக்கலாம்; முன் அல்லது பின் கதவைத் திறந்தால், சில நேரங்களில் வெளியே அடிக்கும் வெயில் இதமாய் இருக்கலாம்; சரி, நடக்கப்போவோம் என்று ஏமாந்தும் கூட மேலே Jacket இல்லாமல் போய்விட முடியாது. அடிக்கும் குளிர்ந்த காற்றின் வேகம் நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடக்கூடும். பிரித்தானியா மாதிரியான தொடுவானம் அருகில் இருக்கும் தீவுகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வீசும் காற்றின் வேகத்தை, அந்த நிலப்பரப்பில் இருக்கும் குன்றுகள், சிறு மலைகள், கடல் முகத்துவாரங்கள், வளைந்தோடும் ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் போன்றவை அதிகப்படுத்தி சமவெளிகளில் வீசும். அடுத்த காரணமாக, அதன் மேலிருக்கும் ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து வீசும் தூந்த்ரா அதிவேக குளிர் காற்றலைகள் (Polar Jet Streams), இந்த காற்றை அதிகமான குளிருக்குள் கொண்டு செல்கிறது. பிரித்தானியா தீவின் வடபகுதியில் இருக்கும் ஸ்காட்லாந்தில், காற்று அறுவடை பண்ணைகள் (Windfarms) அதிகம். அதுவே, அங்கு மின்சாரம் கொடுக்கும் மிக முக்கியமான அமைப்பாகும். அத

இங்கிலாந்தில் நான்: பார்வை 2

ஆற்றங்கரை நாகரிகங்கள் (இங்கிலாந்து)  (என் அடுத்த பயணநூலில் இருந்து..)  ~~~~~~~~~~~~~~~~ இன்றைய நூலக வாசிப்பின்போது, பிரித்தானியா நாட்டில் மனித குடியேற்றங்கள், பழைய கற்காலத்திலிருந்து (பேலியோலிதிக் (Palaeolithic)) தொடர்ந்தபோதும், அவ்வப்போது மனிதர்கள் இல்லாதிருந்து விடுபட்டு போன காலகட்டங்களும் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றிற்கான காரணங்களாக சொல்லப்படுவது, சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஆர்க்டிக் பகுதி பனிப்பாறைகள் உருகுதல், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் பனிப்பாறைகளால் உண்டான உடைதல்கள், இப்பிரதேசத்தில் மனிதனின் நிரந்தர குடியேற்றங்களில் தடைகள் இருந்துவந்தன என்பதே.  விவசாயம் பிரதானமாக இல்லாமல், வேட்டை தொழிலும், விலங்குகள் வளர்த்தலும் இங்கிருந்த மனித நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததற்கான காரணங்களும் இவைதான். மெசோலிதிக் எனப்படும் மத்திய கற்காலத்தில் தான் மனிதர்கள் பிரித்தானியாவின் வடக்காக நகர்ந்து ஸ்காட்லாந்தை நெருங்கினர். அதற்கு முன்பு வரை அப்பகுதியும் மனிதர்கள் வசிக்கும் தன்மையில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. பழைய கற்காலத்தின் முக்கிய நாகரிகமாக கருதப்படும் யூப்ரதீஸ