Skip to main content

Posts

Featured

காயம் | அகிலா | சிறுகதை

  காயம்  கேத்தியின் குளிர்ந்த காற்று, ஊட்டி பஜார் ரோடின் தணுப்பை விட அதிகம் பயம் காட்டியது. ஜுபிலி ரோடைக் கடந்து கீழிறங்கியது அந்த பாதை. நடப்பதற்கு கூட ஏதுவான பாதையாய் அது இல்லை. இரு சக்கர வாகனத்தை அங்கிருந்த தெருகுழாயின் ஓரமாய் புல் பூத்திருந்த மேட்டில் சரித்து நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கி ஐந்து நிமிடமாயிற்று. பாதை சிறிதும் பெரிதுமான செடிகளின் இடையே வளைந்தது. நேற்றைய மழையின் மிச்சம் நீர், செடிகளின் அடியில் தங்கியும் தங்காமலும் மண்ணை நனைத்து வைத்திருந்தன. கவனமாய் நடக்க வேண்டியிருந்தது.   சிறிது நடைக்குப்பின், சிறுவெளி திறந்தது. இருபது முப்பது குடியிருப்புகள் இருந்தன. ரேவதி சொன்ன வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. அந்த வீட்டின் முன் கூட்டம் சிறிதாய் கூடியிருந்தது. அதன் வாசலில் ஸ்வெட்டருக்குள்ளும் சால்வைக்குள்ளும் கைகளை நுழைத்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் நின்றிருந்தார்கள். காக்கி காற்சிராயை வைத்து போலீஸ் இருப்பதை தெரியமுடிந்தது. அருகே சென்றதும், மலைக்கே ஆன முகச்சுருக்கங்களும் சிறு கண்களும் இல்லாது இருக்க, சற்று விலகி எனக்கு வழிவிட்டார்கள்.   குனிந்து வீட்டி...

Latest posts

தமிழ் நாவல்களில் யதார்த்தவாத இருத்தலியல் | சாகித்ய அகாடெமி உரை | அகிலா