Skip to main content

கோவை பதிவர்கள் சங்கம்...

  என்றென்றும் சிறக்க...

KOVAI BLOGGERS ASSOCIATION 
Regd No :370/2012 


கோவை பதிவர்கள் சங்கம்
ஒரு வயது முற்றுப் பெற்று 
இரண்டாம் வயதின் ஆரம்பம்...
எங்களை வாழ்த்தியவர்கள் ஏராளம்
இருந்தும் இன்னும் வளர காத்திருக்கிறோம்...

பெயரிலேயே கோவையைப் பதித்து
நண்பர்கள் சிலராய் நாங்கள் சேர்ந்து தொடங்க
இன்னுமாய் வந்து இணைந்துக் கொண்டார்கள்
அனேகம் பேர்...

கோவை பதிவர்கள் சங்கம்தான்
பதிவர்களுக்கான முதல் சங்கமும் கூட
அதில் சற்று பெருமையும்
நிறைய உவகையும் உண்டு... 

பெண்ணென்றும் ஆணென்றும் பேதமில்லாமல்
நட்பு என்னும் கைக்கோர்த்து
புன்னைகையை மட்டுமே பரிமாறி
சேவை உள்ளத்துடன்
இணைந்து பணியாற்றி வருகிறோம்...

தோப்பு என்னும் கூட்டமைப்பு கொண்டு
தொண்டுகள் பல ஆற்றி வருகிறோம்

  • உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல்  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியது.
  • இன்று கோவை PSG  மருத்துவமனையில் இருதய வால்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தினம் என்கிற 65 வயது பெண்மணிக்கு A + ரத்தம்  4 யூனிட்  ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மிக நலமாக இருக்கிறார்
  • கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள 150 ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கியது
  • ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர்க்கான மனநோய் காப்பகத்தில் அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
  • கோவை உக்கடம் சரகத்திற்குட்டப்பட்ட முஸ்லீம் மஜீத் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் என்பவரின் மூலம் அவர்கள் சமூகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்பட்டது.
  • அதே போல் டெல்லி தமிழ்க்குடில் அமைப்பால் அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட பொது நூலக கட்டுமான பணிக்கு நம் அமைப்பின் மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது.
  • கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தல்
  • கோவை பதிவர்கள் பிரசுரத்தின் வாயிலாக நூல்கள் வெளியிடுதல்






மேலும் வாசிக்க :


இன்னுமாய் உங்கள் அனைவரின் ஆசியுடன்
சமூகம் சிறக்க சேவைகள் பல செய்யவே
விழைகிறோம்...

எங்களுடன் இணைந்து பணியாற்றி வரும்
இனியும் இணைந்து பணிபுரிய விரும்பும்
அனைத்து நண்பர்களுக்கும்
எங்களின் அன்பும் நன்றியும்...

  
KOVAI BLOGGERS ASSOCIATION 
Regd No :370/2012 

இந்தியாவின் முதல் வலைப்பதிவர்களுக்கான சங்கம் தோற்றுவித்தது  நம் கோவையில் தான்.



    



  

Comments

  1. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் தோழி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு...

      Delete
  4. அருமையான முயற்சி..எல்லா மாவட்டங்களிலும் பரவட்டும்..

    ReplyDelete
    Replies
    1. எங்களின் உதவும் மனப்பான்மை உங்களின் இந்த ஊக்கத்தால் மேலும் உயரும்...நன்றி உங்களுக்கு...

      Delete
  5. சங்கம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி